tag:blogger.com,1999:blog-53977195884942845622024-03-05T21:30:52.585+05:30வெட்டி<center>எனக்குப்பிடித்தவைகள்</center>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-37896051287624192362015-09-05T13:53:00.000+05:302015-09-05T13:53:11.866+05:30பேயாழ்வார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
ஸ்ரீ:<br />
ஸ்ரீமதே ராமானுஜாய நம:<br />
<br />
மூன்றாம் திருவந்தாதி தனியன்<br />
<br />
குருகை காவலப்பன் அருளிச் செய்தது<br />
<br />
நேரிசை வெண்பா<br />
<br />
சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்<br />
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்<br />
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,<br />
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து. <br />
<br />
<br />
<br />
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி<br />
<br />
2282 திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்<br />
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்<br />
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,<br />
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1<br />
<br />
2283 இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,<br />
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று<br />
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை<br />
மருக்கண்டு கொண்டேன் மனம். 2<br />
<br />
2284 மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்<br />
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்<br />
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,<br />
வருநரகம் தீர்க்கும் மருந்து. 3<br />
<br />
2285 மருந்தும் பொருளும் அமுதமும் தானே,<br />
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்<br />
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,<br />
அன்றுலகம் தாயோன் அடி. 4<br />
<br />
2286 அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,<br />
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்<br />
μராழி வெய்யோ னொளியு மதன்றே<br />
ஆராழி கொண்டாற் கழகு? 5<br />
<br />
2287 அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,<br />
அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே<br />
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,<br />
கங்கைநீர் கான்ற கழல்? 6<br />
<br />
2288 கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,<br />
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்<br />
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,<br />
நண்ணற் கரியானை நாம். 7<br />
<br />
2289 நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,<br />
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி<br />
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,<br />
கண்ணனையே காண்கநங் கண். 8<br />
<br />
2290 கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,<br />
மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்<br />
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,<br />
திருமா மணிவண்ணன் தேசு. 9<br />
<br />
2291 தேசும் திறலும் திருவும் உருவமும்,<br />
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்<br />
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,<br />
நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10<br />
<br />
2292 நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்<br />
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்<br />
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார்<br />
_ற்கடலான் _ண்ணறிவி னான். 11<br />
<br />
2293 அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,<br />
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்<br />
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்<br />
பைங்கோத வண்ணன் படி. 12<br />
<br />
2294 படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,<br />
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,<br />
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,<br />
மாகாய மாய்நின்ற மாற்கு. 13<br />
<br />
2295 மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,<br />
_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால<br />
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,<br />
பாதத்தான் பாதம் பணிந்து. 14<br />
<br />
2296 பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,<br />
பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்<br />
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்<br />
மனந்த னணைக்கிடக்கும் வந்து. 15<br />
<br />
2297 வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்<br />
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை<br />
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,<br />
திருவல்லிக் கேணியான் சென்று. (2) 16<br />
<br />
2298 சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,<br />
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்<br />
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,<br />
மறவாது வாழ்த்துகவென் வாய். 17<br />
<br />
2299 வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்<br />
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின்<br />
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,<br />
அஞ்சா திருக்க அருள். 18<br />
<br />
2300 அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று<br />
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத<br />
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,<br />
முந்தையராய் நிற்பார்க்கு முன்? 19<br />
<br />
2301 முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்<br />
பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே<br />
திருமாலே.செங்க ணெடியானே, எங்கள்<br />
பெருமானே. நீயிதனைப் பேசு. 20<br />
<br />
2302 பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே<br />
வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய<br />
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ<br />
வக்கரனைக் கொன்றான் வடிவு. 21<br />
<br />
2303 வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்<br />
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,<br />
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,<br />
மெய்ம்மையே காண விரும்பு. 22<br />
<br />
2304 விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்<br />
சுரும்பு தொளையில்சென் று-த, அரும்பும்<br />
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,<br />
மனம்துழாய் மாலாய் வரும். 23<br />
<br />
2305 வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,<br />
நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும்<br />
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்<br />
தொடராழி நெஞ்சே. தொழுது. 24<br />
<br />
2306 தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,<br />
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட<br />
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்<br />
சேயானை நெஞ்சே. சிறந்து? 25<br />
<br />
2307 சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,<br />
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,<br />
வேங்கடமும் வெகாவும் வேளுக்கைப் பாடியுமே,<br />
தாம்கடவார் தண்டுழா யார். 26<br />
<br />
2308 ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,<br />
காரே மலிந்த கருங்கடலை, நேரே<br />
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி<br />
அடைந்தானை நாளும் அடைந்து? 27<br />
<br />
2309 அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று<br />
மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்<br />
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்<br />
பேய்ச்சிபா லுண்ட பிரான். 28<br />
<br />
2310 பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,<br />
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த<br />
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,<br />
தெருளா மொழியானைச் சேர்ந்து. 29<br />
<br />
2311 சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்<br />
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த<br />
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,<br />
இறைபாடி யாய இவை. 30<br />
<br />
2312 இவையவன் கோயில் இரணியன தாகம்,<br />
அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா<br />
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்<br />
பாகத்தான் பாற்கடலு ளான். 31<br />
<br />
2313 பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,<br />
_ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட்<br />
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,<br />
குருந்தொசித்த கோபா லகன். 32<br />
<br />
2314 பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்<br />
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ<br />
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்<br />
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33<br />
<br />
2315 அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,<br />
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று<br />
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்<br />
கடந்தானை நெஞ்சமே. காண். 34<br />
<br />
2316 காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு<br />
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்<br />
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்<br />
கழல்பாடி யாம்தொழுதும் கை. 35<br />
<br />
2317 கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,<br />
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய<br />
படைபரவ பாழி பனிநீ ருலகம்,<br />
அடியளந்த மாயன் அவற்கு. 36<br />
<br />
2318 அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,<br />
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்<br />
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,<br />
திகழும் திருமார்வன் தான். 37<br />
<br />
2319 தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,<br />
தானே தவவுருவும் தாரகையும், - தானே<br />
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்<br />
திருசுடரு மாய இறை. 38<br />
<br />
2320 இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,<br />
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த<br />
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,<br />
உள்ளத்தி னுள்ளே உளன். 39<br />
<br />
2321 உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்<br />
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,<br />
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,<br />
மண்ணெடுங்கத் தானளந்த மன். 40<br />
<br />
2322 மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,<br />
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை<br />
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்<br />
குடையாக ஆகாத்த கோ. 41<br />
<br />
2323 கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,<br />
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி<br />
அரியுருவ மாகி இரணியன தாகம்,<br />
தெரியுகிரால் கீண்டான் சினம். 42<br />
<br />
2324 சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,<br />
புனமேய பூமி யதனை, - தனமாகப்<br />
பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,<br />
μரகலத் துள்ள துலகு. 43<br />
<br />
2325 உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்<br />
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்<br />
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,<br />
பூரித்தென் நெஞ்சே புரி. 44<br />
<br />
2326 புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,<br />
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்<br />
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்<br />
மண்கோட்டுக் கொண்டான் மலை. 45<br />
<br />
2327 மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,<br />
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்<br />
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,<br />
பிண்டமாய் நின்ற பிரான். 46<br />
<br />
2328 நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்<br />
சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று<br />
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்<br />
நரகவாய் கீண்டாயும் நீ. 47<br />
<br />
2329 நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,<br />
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே<br />
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,<br />
தேவா சுரம்பொருதாய் செற்று? 48<br />
<br />
2330 செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்<br />
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்<br />
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச்<br />
சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49<br />
<br />
2331 சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,<br />
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த<br />
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,<br />
அணிநீல வண்ணத் தவன். 50<br />
<br />
2332 அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,<br />
அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே<br />
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,<br />
இலங்கா புரமெரித்தான் எய்து. 51<br />
<br />
2333 எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,<br />
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும்<br />
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்<br />
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52<br />
<br />
2334 முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,<br />
இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர்<br />
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,<br />
தண்ணலங்கல் மாலையான் தாள். 53<br />
<br />
2335 தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,<br />
கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது<br />
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,<br />
பெண்ணகலம் காதல் பெரிது. 54<br />
<br />
2336 பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,<br />
கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால்<br />
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்<br />
நீணெடுங்கண் காட்டும் நிறம். 55<br />
<br />
2337 நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,<br />
இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய<br />
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,<br />
பூமங்கை கேள்வன் பொலிவு? 56<br />
<br />
2338 பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,<br />
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து<br />
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,<br />
தெருடன்மேல் கண்டாய் தெளி. 57<br />
<br />
2339 தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,<br />
அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய<br />
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்<br />
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58<br />
<br />
2340 வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,<br />
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்<br />
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்<br />
பெருமான் அடிசேரப் பெற்று. 59<br />
<br />
2341 பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,<br />
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்<br />
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்<br />
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60<br />
<br />
2342 பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,<br />
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு<br />
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,<br />
இளங்குமரன் றன்விண் ணகர். (2) 61<br />
<br />
2343 விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்,<br />
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த<br />
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,<br />
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62<br />
<br />
2344 தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,<br />
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்<br />
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,<br />
இரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63<br />
<br />
2345 இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,<br />
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து<br />
கடைந்த வருத்தமோ கச்சிவெ காவில்,<br />
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? 64<br />
<br />
2346 அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,<br />
மங்க இரணியன தாகத்தை, பொங்கி<br />
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,<br />
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65<br />
<br />
2347 காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,<br />
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த<br />
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,<br />
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66<br />
<br />
2348 ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,<br />
μங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத்<br />
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்<br />
பகரு மதியென்றும் பார்த்து. 67<br />
<br />
2349 பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,<br />
பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த<br />
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்<br />
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68<br />
<br />
2350 ு வேங்கடம் பாடும், வியன்துழாய்க்<br />
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற<br />
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,<br />
பூண்டநா ளெல்லாம் புகும். 69<br />
<br />
2351 புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி<br />
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்<br />
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,<br />
கண்டு வணங்கும் களிறு. 70<br />
<br />
2352 களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,<br />
ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி<br />
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்<br />
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71<br />
<br />
2353 குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை,<br />
சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று<br />
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை<br />
இளங்குமரர் கோமான் இடம். 72<br />
<br />
2354 இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,<br />
வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த<br />
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,<br />
நாத்தன்னா லுள்ள நலம். 73<br />
<br />
2355 நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,<br />
நிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான்<br />
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,<br />
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74<br />
<br />
2356 சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்<br />
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து<br />
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்<br />
புனவேங்கை நாறும் பொருப்பு. 75<br />
<br />
2357 பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து<br />
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய<br />
வெகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,<br />
அகாவே தீவினைகள் ஆய்ந்து. 76<br />
<br />
2358 ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்<br />
வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த<br />
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த<br />
அடிப்போது நங்கட் கரண். 77<br />
<br />
2359 அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,<br />
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்<br />
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,<br />
μதுகதி மாயனையே μர்த்து. 78<br />
<br />
2360 μர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,<br />
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த<br />
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,<br />
நிரையார மார்வனையே நின்று. 79<br />
<br />
2361 நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,<br />
ஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, - வென்றிலங்கும்<br />
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,<br />
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80<br />
<br />
2362 நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்<br />
நெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்<br />
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,<br />
μராது நிற்ப துணர்வு? 81<br />
<br />
2363 உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து<br />
புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்<br />
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,<br />
எங்கணைந்து காண்டும் இனி? 82<br />
<br />
2364 இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,<br />
இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்<br />
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,<br />
உள்ளத்தி னுள்ளே யுளன். 83<br />
<br />
2365 உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்<br />
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய<br />
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,<br />
கண்டா ருகப்பர் கவி? 84<br />
<br />
2366 கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,<br />
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்<br />
போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்<br />
ஏற்றுயிரை அட்டான் எழில்? 85<br />
<br />
2367 எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்<br />
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட<br />
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,<br />
கார்வானம் காட்டும் கலந்து. 86<br />
<br />
2368 கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி<br />
மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்<br />
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,<br />
அந்திவான் காட்டும் அது. 87<br />
<br />
2369 அதுநன் றிதுதீதென் றையப் படாதே,<br />
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற<br />
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்<br />
முன்னங் கழலும் முடிந்து. 88<br />
<br />
2370 முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்<br />
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த<br />
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்<br />
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89<br />
<br />
2371 சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா<br />
றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்<br />
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,<br />
வண்டுழாய் மாலளந்த மண்? 90<br />
<br />
2372 மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,<br />
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்<br />
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,<br />
வயிற்றினோ டாற்றா மகன். 91<br />
<br />
2373 மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,<br />
மகனா மவன்மகன்றன் காதல் - மகனை<br />
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே<br />
நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92<br />
<br />
2374 நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,<br />
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு<br />
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,<br />
உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93<br />
<br />
2375 உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,<br />
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே<br />
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,<br />
பொன்றாமை மாயன் புகுந்து. 94<br />
<br />
2376 புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்<br />
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்<br />
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே<br />
வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95<br />
<br />
2377 வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்<br />
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த<br />
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,<br />
அடித்தா மரையாம் அலர். 96<br />
<br />
2378 அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,<br />
மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த<br />
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்<br />
கெண்ணத்தா னாமோ இமை? 97<br />
<br />
2379 இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,<br />
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்<br />
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,<br />
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98<br />
<br />
2380 தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,<br />
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்<br />
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்<br />
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99<br />
<br />
2381 சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்<br />
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த<br />
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,<br />
தேனமரும் பூமேல் திரு. (2) 100<br />
<br />
<br />
பேயாழ்வார் திருவடிகளே சரணம்.<br />
<br />
<br />
<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-23171617129929310442015-09-05T13:24:00.000+05:302015-09-05T13:24:50.533+05:30பூதத்தாழ்வார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஸ்ரீ:<br />
ஸ்ரீமதே ராமானுஜாய நம:<br />
<br />
இரண்டாம் திருவந்தாதி தனியன்<br />
<br />
திருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது<br />
<br />
நேரிசை வெண்பா<br />
<br />
என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா<br />
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்<br />
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்<br />
பூதத்தார் பொன்னங்கழல். <br />
<br />
<br />
<br />
ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி<br />
<br />
2182 அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,<br />
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி<br />
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு<br />
ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1<br />
<br />
2183 ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,<br />
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்<br />
தணியமர ராக்குவிக்கு மதன்றே, நாங்கள்<br />
பணியமரர் கோமான் பரிசு? 2<br />
<br />
2184 பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,<br />
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்<br />
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து<br />
நல்லமரர் கோமான் நகர். 3<br />
<br />
2185 நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே<br />
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்<br />
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,<br />
அங்கம்வலம் கொண்டான் அடி. 4<br />
<br />
2186 அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்<br />
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற<br />
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை<br />
ஆரோத வல்லார் அறிந்து? 5<br />
<br />
2187 அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்<br />
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்<br />
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,<br />
காரோத வண்ணன் கழல். 6<br />
<br />
2188 கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்<br />
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த<br />
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை<br />
μராழி நெஞ்சே. உகந்து. 7<br />
<br />
2189 உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை<br />
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து<br />
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்<br />
அலைபண்பா லானமையால் அன்று. 8<br />
<br />
2190 அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,<br />
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று<br />
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,<br />
பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9<br />
<br />
2191 பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து<br />
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய<br />
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்<br />
காவடியேன் பட்ட கடை. 10<br />
<br />
2192 கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்<br />
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற<br />
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை<br />
ஆரோத வல்லார் அவர்? 11<br />
<br />
2193 அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,<br />
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்<br />
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே<br />
தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12<br />
<br />
2194 தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்<br />
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க<br />
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்<br />
பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13<br />
<br />
2195 பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்<br />
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்<br />
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்<br />
தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14<br />
<br />
2196 திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று<br />
பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்<br />
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்<br />
தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15<br />
<br />
2197 தனக்கடிமை பட்டது தானறியா னேலும்<br />
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை<br />
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,<br />
மாரியார் பெய்கிற்பார் மற்று? 16<br />
<br />
2198 மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,<br />
சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்<br />
பிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்<br />
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17<br />
<br />
2199 கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,<br />
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்<br />
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,<br />
வான்கடந்தான் செய்த வழக்கு. 18<br />
<br />
2200 வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,<br />
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று<br />
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,<br />
பார்விளங்கச் செய்தாய் பழி. 19<br />
<br />
2201 பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,<br />
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி<br />
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,<br />
காரணங்கள் தாமுடையார் தாம். 20<br />
<br />
2202 தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்<br />
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்<br />
திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே<br />
அருநரகம் சேர்வ தரிது. 21<br />
<br />
2203 அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,<br />
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்<br />
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,<br />
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22<br />
<br />
2204 தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்<br />
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த<br />
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்<br />
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23<br />
<br />
2205 அவன்கண்டாய் நன்னெஞ்சே.ஆரருளும் கேடும்,<br />
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய்<br />
காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,<br />
சீற்றத்தீ யாவானும் சென்று. 24<br />
<br />
2206 சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,<br />
கொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்<br />
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்<br />
வாயோங்கு தொல்புகழான் வந்து. 25<br />
<br />
2207 வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்<br />
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்<br />
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,<br />
படியமரர் வாழும் பதி. 26<br />
<br />
2208 பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,<br />
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்<br />
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,<br />
மால்தேடி யோடும் மனம். 27<br />
<br />
2209 மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்<br />
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்<br />
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்<br />
மாவாய் பிளந்த மகன். 28<br />
<br />
2210 மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,<br />
அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்<br />
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை<br />
நீறாக எய்தழித்தாய் நீ. 29<br />
<br />
2211 நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,<br />
நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று<br />
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,<br />
பேரோத மேனிப் பிரான். 30<br />
<br />
2212 பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,<br />
குராநல் செழும்போது கொண்டு, - வராகத்<br />
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,<br />
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31<br />
<br />
2213 மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்<br />
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த<br />
தழலாழி சங்க மவைபாடி யாடும்,<br />
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32<br />
<br />
2214 துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்<br />
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்<br />
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,<br />
வாய்திறங்கள் சொல்லும் வகை. 33<br />
<br />
2215 வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,<br />
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த<br />
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,<br />
என்பாக்கி யத்தால் இனி. 34<br />
<br />
2216 இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,<br />
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று<br />
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,<br />
சேமநீ ராகும் சிறிது. 35<br />
<br />
2217 சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,<br />
அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை<br />
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,<br />
எண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36<br />
<br />
2218 இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,<br />
திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்<br />
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்<br />
ஏதங்க ளெல்லா மெமக்கு. 37<br />
<br />
2219 எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,<br />
தமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும்<br />
மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்<br />
μதுவதே நாவினா லோத்து. 38<br />
<br />
2220 μத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்<br />
ஏத்தும் திறமறிமி னேழைகாள், μத்தனை<br />
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்<br />
சொல்லுவதே μத்தின் சுருக்கு. 39<br />
<br />
2221 சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்<br />
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த<br />
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத<br />
போகத்தா லில்லை பொருள். 40<br />
<br />
2222 பொருளால் அமருலகம் புக்கியல லாகாது<br />
அருளா லறமருளு மன்றே, - அருளாலே<br />
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,<br />
நீமறவேல் நெஞ்சே. நினை. 41<br />
<br />
2223 நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,<br />
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்<br />
பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,<br />
துறந்தார் தொழுதாரத் தோள். 42<br />
<br />
2224 தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,<br />
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,<br />
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்<br />
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43<br />
<br />
2225 சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,<br />
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்<br />
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்<br />
μதுவதே நாவினா லுள்ளு. 44<br />
<br />
2226 உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,<br />
தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய<br />
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,<br />
பாதத்தான் பாதம் பயின்று. 45<br />
<br />
2227 பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்<br />
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற<br />
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே<br />
மணிதிகழும் வண்தடக்கை மால். 46<br />
<br />
2228 மாலை யரியுருவன் பாத மலரணிந்து,<br />
காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்<br />
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்<br />
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47<br />
<br />
2229 உணர்ந்தாய் மறைநான்கும் μதினாய் நீதி<br />
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்<br />
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,<br />
மாயிருஞ் சோலை மலை. 48<br />
<br />
2230 மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,<br />
குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த<br />
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,<br />
அஞ்சாதென் னெஞ்சே. அழை. 49<br />
<br />
2231 அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,<br />
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய<br />
ஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,<br />
மாயவனே என்று மதித்து. 50<br />
<br />
2232 மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்,<br />
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய்<br />
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த<br />
நீராழி வண்ணன் நிறம். 51<br />
<br />
2233 நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,<br />
அறம்பெரிய னார தறிவார்? - மறம்புரிந்த<br />
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,<br />
நீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52<br />
<br />
2234 நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,<br />
அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது<br />
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,<br />
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53<br />
<br />
2235 வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்<br />
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்<br />
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்<br />
திளங்கோயில் கைவிடேல் என்று. 54<br />
<br />
2236 என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,<br />
நின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி<br />
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்<br />
கடலாழி நீயருளிக் காண். 55<br />
<br />
2237 காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,<br />
நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்<br />
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,<br />
திருமாலை நாங்கள் திரு. 56<br />
<br />
2238 திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,<br />
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்<br />
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,<br />
நாற்றிசையும் கேட்டீரே நாம்? 57<br />
<br />
2239 நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து<br />
μம்பி யிருந்தெம்மை μதுவித்து, - வேம்பின்<br />
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,<br />
அருள்நீர்மை தந்த அருள். 58<br />
<br />
2240 அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,<br />
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து<br />
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,<br />
μக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59<br />
<br />
2241 μருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,<br />
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், μருருவம்<br />
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,<br />
நீதியால் மண்காப்பார் நின்று. 60<br />
<br />
2242 நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்<br />
சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று<br />
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்<br />
பிரமாணித் தார்பெற்ற பேறு. 61<br />
<br />
2243 பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,<br />
மாறென்று சொல்லிவணங்கினேன், ஏறின்<br />
பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின் போய்,<br />
எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62<br />
<br />
2244 ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து<br />
ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி<br />
உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,<br />
கண்டபொருள் சொல்லின் கதை. 63<br />
<br />
2245 கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,<br />
இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்<br />
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,<br />
பருமொழியால் காணப் பணி. 64<br />
<br />
2246 பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்<br />
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்<br />
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே<br />
இருந்தேத்தி வாழும் இது. 65<br />
<br />
2247 இது கண்டாய் நன்னெஞ்சே.இப்பிறவி யாவது,<br />
இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்<br />
நாரணன்பே ரோதி நகரத் தருகணையா,<br />
காரணமும் வல்லையேல் காண். 66<br />
<br />
2248 கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்<br />
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்<br />
உறுநோய் வினையிரண்டும் μட்டுவித்து, பின்னும்<br />
மறுநோய் செறுவான் வலி. 67<br />
<br />
2249 வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள<br />
வலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க<br />
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,<br />
கோணாகம் கொம்பொசித்த கோ. 68<br />
<br />
2250 கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே<br />
மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்<br />
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,<br />
தண்கமல மேய்ந்தார் தமர். 69<br />
<br />
2251 தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,<br />
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்<br />
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,<br />
ஏவல்ல எந்தைக் கிடம். 70<br />
<br />
2252 இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்<br />
றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்<br />
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,<br />
பூவா ரடிநிமிர்ந்த போது. 71<br />
<br />
2253 போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த<br />
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது<br />
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,<br />
அணிவேங் கடவன்பே ராய்ந்து. 72<br />
<br />
2254 ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,<br />
வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த<br />
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்<br />
இறைக்காட் படத்துணிந்த யான். 73<br />
<br />
2255 யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,<br />
யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே<br />
இருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,<br />
பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74<br />
<br />
2256 பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,<br />
இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த<br />
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,<br />
வான்கலந்த வண்ணன் வரை. 75<br />
<br />
2257 வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,<br />
விரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு<br />
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே<br />
μதிப் பணிவ தூறும். 76<br />
<br />
2258 உறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம்,<br />
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்<br />
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்_ றெப்பொழுதும்,<br />
சாற்றி யுரைத்தல் தவம். 77<br />
<br />
2259 தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி<br />
நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்<br />
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்<br />
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78<br />
<br />
2260 பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்<br />
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற<br />
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த<br />
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79<br />
<br />
2261 நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,<br />
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த<br />
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்<br />
படிக்கோலம் கண்ட பகல்? 80<br />
<br />
2262 பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்<br />
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்<br />
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,<br />
வான்திகழும் சோதி வடிவு. 81<br />
<br />
2263 வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்<br />
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி<br />
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,<br />
கோலத்தா லில்லை குறை. 82<br />
<br />
2264 குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,<br />
மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்<br />
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,<br />
மாயன்கண் சென்ற வரம். 83<br />
<br />
2265 வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,<br />
உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த<br />
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,<br />
அங்கண்மா ஞாலத் தமுது. 84<br />
<br />
2266 அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,<br />
அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன<br />
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,<br />
நன்மாலை யேத்தி நவின்று. 85<br />
<br />
2267 நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே<br />
பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்<br />
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்<br />
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86<br />
<br />
2268 இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்<br />
சென்றாங் களந்த திருவடியை, - அன்று<br />
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,<br />
திருக்கோட்டி எந்தை திறம். 87<br />
<br />
2269 திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,<br />
திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்<br />
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்<br />
கடிநகர வாசற் கதவு. 88<br />
<br />
2270 கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,<br />
அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்<br />
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,<br />
மாணியாய்க் கொண்டிலையே மண். 89<br />
<br />
2271 மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,<br />
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்<br />
திருமாலை செங்க ணெடியானை, எங்கள்<br />
பெருமானைக் கைதொழுத பின். 90<br />
<br />
2272 பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,<br />
முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்<br />
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்<br />
அளந்தா னவஞ்சே வடி. 91<br />
<br />
2273 அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்<br />
படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்<br />
நாமமே ஏத்துமின்க ளேத்தினால்,தாம்வேண்டும்<br />
காமமே காட்டும் கடிது. 92<br />
<br />
2274 கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,<br />
கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்<br />
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்<br />
சுண்டானை ஏத்துமினோ உற்று. 93<br />
<br />
2275 உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்<br />
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்<br />
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்<br />
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94<br />
<br />
2276 என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை<br />
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்<br />
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்<br />
ஆழியான் அத்தியூ ரான். 95<br />
<br />
2277 அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்<br />
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ<br />
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்<br />
இறையாவான் எங்கள் பிரான். (2) 96<br />
<br />
2278 எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,<br />
செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு<br />
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,<br />
குடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97<br />
<br />
2279 கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,<br />
உண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு<br />
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்<br />
இடமாகக் கொண்ட இறை. 98<br />
<br />
2280 இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்<br />
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல<br />
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்<br />
மாவடிவில் மண்கொண்டான் மால். (2) 99<br />
<br />
2281 மாலே. நெடியானே.கண்ணனே, விண்ணவர்க்கு<br />
மேலா.வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்<br />
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்<br />
அளவன்றால் யானுடைய அன்பு. (2) 100<br />
<br />
<br />
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-4653322754053317492015-09-02T20:19:00.000+05:302015-09-02T20:19:31.237+05:30பொய்கையாழ்வர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பொய்கையழ்வார்<br />
<br />
பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார்.காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில்திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதிஎனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.<br />
<br />
பொய்கைவாழ்வார் 12 ஆழ்வார்களில் முதலாழ்வார் ஆவர். காஞ்சியில் ஐப்பசி மதம் திருவோணம் நட்சத்திரத்டில் திருவெஃகா எனும் ஊரில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பது செவி வழி செய்தி.<br />
திருமாலின் 10 அவதாரங்களையும் பாடியிருக்கார்.<br />
<br />
பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கின் அம்சம் ஆவார்.<br />
<br />
பொய்கை ஆழ்வார் <br />
முதல் திருவந்தாதி<br />
2081 வையம் தகளியா வார் கடலே நெய் ஆக <br />
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய <br />
சுடர்-ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல்-மாலை- <br />
இடர்-ஆழி நீங்குகவே என்று (1)<br />
<br />
<br />
<br />
2082 என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- <br />
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது- <br />
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ <br />
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2)<br />
<br />
<br />
<br />
2083 பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த <br />
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் <br />
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்- <br />
நீ அளவு கண்ட நெறி (3)<br />
<br />
<br />
<br />
2084 நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து <br />
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்- <br />
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த <br />
ஆலம் அமர் கண்டத்து அரன் (4)<br />
<br />
<br />
<br />
2085 அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி <br />
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் <br />
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி <br />
உருவம் எரி கார் மேனி ஒன்று (5)<br />
<br />
<br />
<br />
2086 ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் <br />
இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று <br />
கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்- <br />
திருவரங்கம் மேயான் திசை (6)<br />
<br />
<br />
<br />
2087 திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து <br />
இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க் <br />
கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத <br />
வண்ணன் படைத்த மயக்கு (7)<br />
<br />
<br />
<br />
2088 மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து <br />
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் <br />
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!- <br />
போர் ஆழிக் கையால் பொருது? (8)<br />
<br />
<br />
<br />
2089 பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன <br />
்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட <br />
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க <br />
மா வடிவின் நீ அளந்த மண் (9)<br />
<br />
<br />
<br />
2090 மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் <br />
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் <br />
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் <br />
உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10)<br />
<br />
<br />
<br />
2091 வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் <br />
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு <br />
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்- <br />
காணா கண் கேளா செவி (11)<br />
<br />
<br />
<br />
2092 செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ <br />
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத <br />
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே- <br />
ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12)<br />
<br />
<br />
<br />
2093 இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல <br />
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக <br />
நீதியால் ஓதி நியமங்களால் பரவ <br />
ஆதியாய் நின்றார் அவர் (13)<br />
<br />
<br />
<br />
2094 அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி <br />
இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச் <br />
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த <br />
மூர்த்தி உருவே முதல் (14)<br />
<br />
<br />
<br />
2095 முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும் <br />
முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய <br />
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் <br />
பல்லார் அருளும் பழுது (15)<br />
<br />
<br />
<br />
2096 பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி <br />
அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்- <br />
கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண் <br />
அடல் ஓத வண்ணர் அடி (16)<br />
<br />
<br />
<br />
2097 அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல <br />
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் <br />
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள் <br />
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17)<br />
<br />
<br />
<br />
2098 நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் <br />
தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் <br />
பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்- <br />
மருது இடை போய் மண் அளந்த மால் (18)<br />
<br />
<br />
<br />
2099 மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு <br />
ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக் <br />
கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும் <br />
திருமேனி நீ தீண்டப்பெற்று? (19)<br />
<br />
<br />
<br />
2100 பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய் <br />
செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா- <br />
மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி <br />
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20)<br />
<br />
<br />
<br />
2101 நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால் <br />
சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும் <br />
படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம் <br />
அடை ஆழி நெஞ்சே அறி (21)<br />
<br />
<br />
<br />
2102 அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்- <br />
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் <br />
காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத் <br />
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22)<br />
<br />
<br />
<br />
2103 தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை <br />
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த- <br />
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த <br />
வீங்கு ஓத வண்ணர் விரல் (23)<br />
<br />
<br />
<br />
2104 விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி <br />
உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது <br />
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே? <br />
ஓங்கு ஓத வண்ணா உரை (24)<br />
<br />
<br />
<br />
2105 உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் <br />
வரைமேல் மரகதமே போலத் திரைமேல் <br />
கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி <br />
இடந்தானை ஏத்தி எழும் (25)<br />
<br />
<br />
<br />
2106 எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை <br />
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் <br />
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர் <br />
மனச் சுடரைத் தூண்டும் மலை (26)<br />
<br />
<br />
<br />
2107 மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து <br />
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப் <br />
போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்- <br />
கார்க் கோடு பற்றியான் கை (27)<br />
<br />
<br />
<br />
2108 கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து <br />
ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய <br />
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த <br />
இறையான் நின் ஆகத்து இறை (28)<br />
<br />
<br />
<br />
2109 இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் <br />
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் <br />
பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த <br />
செங்கண் மால் கண்டாய் தெளி (29)<br />
<br />
<br />
<br />
2110 தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து <br />
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத் <br />
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே <br />
போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30)<br />
<br />
<br />
<br />
2111 புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி <br />
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ <br />
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று <br />
எண்ணத்தான் ஆமோ இமை? (31)<br />
<br />
<br />
<br />
2112 இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி <br />
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் <br />
ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய் <br />
நாகத்து அணையான் நகர் (32)<br />
<br />
<br />
<br />
2113 நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் <br />
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே <br />
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் <br />
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33)<br />
<br />
<br />
<br />
2114 என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் <br />
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப் <br />
பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண் <br />
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34)<br />
<br />
<br />
<br />
2115 ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் <br />
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி <br />
நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து <br />
முடியான் படைத்த முரண்? (35)<br />
<br />
<br />
<br />
2116 முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் <br />
தரணி தனது ஆகத்தானே இரணியனைப் <br />
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ <br />
மண் இரந்து கொண்ட வகை? (36)<br />
<br />
<br />
<br />
2117 வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் <br />
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் <br />
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் <br />
ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37)<br />
<br />
<br />
<br />
2118 ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை <br />
பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய <br />
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் <br />
எம் என்னும் மாலது இடம் (38)<br />
<br />
<br />
<br />
2119 இடந்தது பூமி எடுத்தது குன்றம் <br />
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் <br />
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே- <br />
பேர் ஓத வண்ணர் பெரிது (39)<br />
<br />
<br />
<br />
2120 பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ <br />
வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில் <br />
மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்- <br />
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40)<br />
<br />
<br />
<br />
2121 குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் <br />
இன்று முதலாக என் நெஞ்சே என்றும் <br />
புறன் உரையே ஆயினும் பொன் ஆழிக் கையான் <br />
திறன் உரையே சிந்தித்திரு (41)<br />
<br />
<br />
<br />
2122 திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் <br />
திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல் <br />
பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த <br />
மால் ஓத வண்ணர் மனம்? (42)<br />
<br />
<br />
<br />
2123 மன மாசு தீரும் அரு வினையும் சாரா <br />
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய <br />
பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி <br />
தம் தொழாநிற்பார் தமர் (43)<br />
<br />
<br />
<br />
2124 தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே <br />
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து <br />
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே <br />
அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44)<br />
<br />
<br />
<br />
2125 ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க <br />
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய <br />
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை <br />
பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45)<br />
<br />
<br />
<br />
2126 பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற <br />
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த <br />
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம் <br />
போகத்தால் பூமி ஆள்வார் (46)<br />
<br />
<br />
<br />
2127 வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் <br />
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய <br />
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள <br />
்கைந் நாகம் காத்தான் கழல் (47)<br />
<br />
<br />
<br />
2128 கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல் <br />
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் <br />
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல <br />
மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48)<br />
<br />
<br />
<br />
2129 மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை <br />
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த <br />
சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் <br />
ஆதி காண்பார்க்கும் அரிது (49)<br />
<br />
<br />
<br />
2130 அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் <br />
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் <br />
மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர் <br />
ஏற்றானைக் காண்பது எளிது (50)<br />
<br />
<br />
<br />
2131 எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் <br />
தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில் <br />
பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய் <br />
இருந்தான் திருநாமம் எண் (51)<br />
<br />
<br />
<br />
2132 எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர் <br />
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி <br />
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் <br />
திருமாலைக் கைதொழுவர் சென்று (52)<br />
<br />
<br />
<br />
2133 சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் <br />
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் <br />
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் <br />
அணை ஆம் திருமாற்கு அரவு (53)<br />
<br />
<br />
<br />
2134 அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் <br />
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி <br />
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு <br />
அட்டு எடுத்த செங்கண் அவன் (54)<br />
<br />
<br />
<br />
2135 அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன் <br />
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்<br />
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல்<br />
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55)<br />
<br />
<br />
<br />
2136 பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை<br />
ஆரே அறிவார்? அது நிற்க நேரே<br />
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன்<br />
அடிக்கமலம் தன்னை அயன் (56)<br />
<br />
<br />
<br />
2137 அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி <br />
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற<br />
நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும்<br />
சொல் மாலை கற்றேன் தொழுது (57)<br />
<br />
<br />
<br />
2138 தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி <br />
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி<br />
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் <br />
அந்தரம் ஒன்று இல்லை அடை (58)<br />
<br />
<br />
<br />
2139 அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம்<br />
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை<br />
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் <br />
தன் வில் அங்கை வைத்தான் சரண் (59)<br />
<br />
<br />
<br />
2140 சரணா மறை பயந்த தாமரையானோடு <br />
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய<br />
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது <br />
ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60)<br />
<br />
<br />
<br />
2141 உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ்<br />
விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில்<br />
செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன்<br />
புந்தியில் ஆய புணர்ப்பு (61)<br />
<br />
<br />
<br />
2142 புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து <br />
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ<br />
ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் <br />
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62)<br />
<br />
<br />
<br />
2143 தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்<br />
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும்<br />
கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே <br />
நாணாமை நள்ளேன் நயம் (63)<br />
<br />
<br />
<br />
2144 நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு <br />
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் <br />
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் <br />
வரும் ஆறு என் என்மேல் வினை? (64)<br />
<br />
<br />
<br />
2145 வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் <br />
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு<br />
அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண்<br />
கரியானைக் கைதொழுதக்கால் (65)<br />
<br />
<br />
<br />
2146 காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த<br />
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண்<br />
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் <br />
பேர் ஆழி கொண்டான் பெயர் (66)<br />
<br />
<br />
<br />
2147 பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ<br />
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்<br />
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்<br />
ஒருவனையே நோக்கும் உணர்வு (67)<br />
<br />
<br />
<br />
2148 உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி?<br />
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர் <br />
விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப்<br />
பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68)<br />
<br />
<br />
<br />
2149 பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின் <br />
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று<br />
வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?<br />
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69)<br />
<br />
<br />
<br />
2150 சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு<br />
செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த்<br />
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் <br />
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70)<br />
<br />
<br />
<br />
2151 நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி<br />
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்<br />
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் <br />
அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71)<br />
<br />
<br />
<br />
2152 அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன்<br />
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி<br />
காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும் <br />
பூண் ஆரம் பூண்டான் புகழ் (72)<br />
<br />
<br />
<br />
2153 புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை <br />
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க்<br />
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் <br />
உடலும் உயிரும் ஏற்றான் (73)<br />
<br />
<br />
<br />
2154 ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் <br />
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால்<br />
மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான் <br />
கங்கையான் நீள் கழலான் காப்பு (74)<br />
<br />
<br />
<br />
2155 காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள் <br />
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச்<br />
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை<br />
வந்திப்பார் காண்பர் வழி (75)<br />
<br />
<br />
<br />
2156 வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா<br />
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும்<br />
வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த<br />
சீரான் திருவேங்கடம் (76)<br />
<br />
<br />
<br />
2157 வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத<br />
பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்<br />
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே <br />
என்றால் கெடுமாம் இடர் (77)<br />
<br />
<br />
<br />
2158 இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம்<br />
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய<br />
பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும் <br />
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78)<br />
<br />
<br />
<br />
2159 கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்?<br />
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை<br />
நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்<br />
ஆரம் கை தோய அடுத்து? (79)<br />
<br />
<br />
<br />
2160 அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி <br />
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை<br />
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு<br />
அல்லாதும் ஆவரோ ஆள்? (80)<br />
<br />
<br />
<br />
2161 ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று <br />
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச்<br />
சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப்<br />
பற்றிக் கடத்தும் படை (81)<br />
<br />
<br />
<br />
2162 படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந்<br />
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்<br />
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் <br />
மான் மாய எய்தான் வரை (82)<br />
<br />
<br />
<br />
2163 வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர்<br />
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய<br />
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல்<br />
பேர் ஆழி கொண்ட பிரான் (83)<br />
<br />
<br />
<br />
2164 பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்?<br />
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து<br />
எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை<br />
அடிக்கு அளவு போந்த படி? (84)<br />
<br />
<br />
<br />
2165 படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள் <br />
கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில்<br />
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி <br />
நெறி நின்ற நெஞ்சமே நீ (85)<br />
<br />
<br />
<br />
2166 நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப்<br />
பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல்<br />
கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல்<br />
இடைகழியே பற்றி இனி (86)<br />
<br />
<br />
<br />
2167 இனி யார் புகுவார் எழு நரக வாசல்?<br />
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்<br />
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு<br />
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87)<br />
<br />
<br />
<br />
2168 நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும்<br />
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும்<br />
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு <br />
என் ஆகில் என்னே எனக்கு? (88)<br />
<br />
<br />
<br />
2169 எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான்<br />
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம் <br />
பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ <br />
மா மேனி காட்டும் வரம் (89)<br />
<br />
<br />
<br />
2170 வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்<br />
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்<br />
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை <br />
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90)<br />
<br />
<br />
<br />
2171 ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி <br />
ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து<br />
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்<br />
மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91)<br />
<br />
<br />
<br />
2172 வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய் <br />
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி<br />
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள்<br />
மண்ணை உமிழ்ந்த வயிறு? (92)<br />
<br />
<br />
<br />
2173 வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச <br />
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் <br />
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின்<br />
சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93)<br />
<br />
<br />
<br />
2174 செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும் <br />
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும்<br />
மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால் <br />
இறையேனும் ஏத்தாது என் நா (94)<br />
<br />
<br />
<br />
2175 நா வாயில் உண்டே நமோ நாரணா என்று<br />
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத<br />
மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர்<br />
தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95)<br />
<br />
<br />
<br />
2176 திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்<br />
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்<br />
மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே<br />
கண்டாய் கடைக்கண் பிடி (96)<br />
<br />
<br />
<br />
2177 பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன்<br />
அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர்<br />
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த<br />
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97)<br />
<br />
<br />
<br />
2178 பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும் <br />
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்<br />
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன்<br />
ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)<br />
<br />
<br />
<br />
2179 உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்<br />
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்<br />
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் <br />
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99)<br />
<br />
<br />
<br />
2180 ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும் <br />
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில்<br />
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்<br />
மாயவனையே மனத்து வை (100)<br />
<br />
<br />
<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-54232463128337951202015-08-23T21:10:00.000+05:302015-08-26T12:25:43.384+05:30சிவராஜ யோக கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நெட்டில் சுட்ட கதை. எங்கே சுட்டேன் எனக்கு தெரியாது<br />
<br />
சிகித்வஜன் என்பவனின் பட்டத்து ராணி சூடாலை. <br />
<br />
உலக சுகங்களில் அதிகமாக ஈடுபாடு கொண்ட அவனுக்கு, இது உண்மையான சுகமில்லை. உண்மையான சுகத்தைத் தேடிப் பெற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.<br />
<br />
அறிஞர்கள் பலரிடமும் அவன் விசாரித்தான். அவர்கள் அனைவரும் உண்மையான சுகம் ஆத்மஞானத்தில்தான் கிடைக்கும் என்றார்கள்.<br />
<br />
அரசனும் அரசியும் ஆத்மஞானம் பெறுவது என முடிவு செய்தார்கள்.<br />
<br />
ராணி சூடாலை மிகவும் புத்திசாலி. அவளுக்கு விரைவில் ஆத்மஞானம் கிடைத்தது. அவள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கலானாள். அவளுக்கு உலகம் இன்பமயமாகத் தோன்றத் தொடங்கியது.<br />
<br />
சூடாலை அரசனுக்கு ஆத்மஞானம் பெறுவதி உதவ விரும்பியும் அதை அவன் ஏற்க மறுத்து விட்டான். அவனுக்குள், “ஒரு பெண்ணிடம் உபதேசம் பெறுவதா?” என்கிற எண்ணம் மேலோங்கியது.<br />
<br />
அதன் பிறகு அவன் எவ்வளவு முயன்றும் ஆத்மஞானம் பெற முடியவில்லை. ஒருநாள் இரவு அவன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.<br />
<br />
அந்தக் காலத்தில் சூடாலையே அரசனின் பணிகள் அனைத்தையும் கவனிக்கத் தொடங்கினாள். யோகப் பயிற்சி மூலம் பல திறன்களைப் பெற்றிருந்த அவள், அரசன் காட்டில் தனிமையில் உலவிக் கொண்டிருந்ததை அறிந்தாள்.<br />
<br />
அவள் தனது சக்தியின் மூலம் தன்னை ஒரு இளைஞனாக மாற்றிக் கொண்டு காட்டிற்குள் சென்றாள். தனது பெயரை கும்பஜன் என்று மாற்றிக் கொண்டாள்.<br />
<br />
சிகித்வஜனுக்கு கும்பஜனாக இருந்த சூடாலை ஆத்மஞானம் பெறுவதற்கான பல வழிகளைக் காட்டினாள். <br />
<br />
அவை அரசனுக்குப் பெரிதும் உதவின.அரசன், சிறிது சிறிதாக ஞான வழியில் முன்னேற்றமடைந்தான். முடிவில் அவனும் ஆத்மஞானம் பெற்று, மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினான். <br />
<br />
சூடாலை அவனைச் சோதிப்பதற்காகத் தன்னை ஆணுருவத்திலிருந்து பெண்ணுருவத்துக்கு மாற்றிக் கொண்டு, மதனிகை என்ற பெயரோடு அவன் முன் தோன்றி, அவனை மணந்து கொண்டு அவனுடன் வாழத் தொடங்கினாள்.<br />
<br />
<br />
<br />
<br />
ஒரு நாள் சூடாலை தன் யோகத் திறனினால் ஒரு இளைஞனைப் படைத்தாள். அன்று ஆற்றில் மாலை வழிபாடு முடித்துக் கொண்டு தன் இருப்பிடத்துக்குத் திரும்பிய அரசன், அங்கே மதனிகை ஒரு இளைஞனுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவனுக்குச் சிறிது கூட கோபம் வரவில்லை. மதனிகை அவனிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.<br />
<br />
உடனே அவன், “இப்போது என்ன ஆகி விட்டது?, நாம் இப்போது நண்பர்களைப் போலத்தான் வாழ்கிறோமே தவிர, கணவன் - மனைவியைப் போலில்லை” என்று சொல்லித் தேற்றினான்.<br />
<br />
அப்போது சூடாலை தன் உண்மையான உருவத்தில் அரசன் முன் தோன்றினாள். அவனுக்கு மகிழ்ச்சி உண்டானது.<br />
<br />
இந்தக் கதையை வசிஷ்ட முனிவர், ஸ்ரீ ராமபிரானுக்குச் சொல்லி, “குழந்தையே நல்ல குலத்தில் தோன்றிய பெண்கள் தம் கணவரையும் சம்சார சாகரத்திலிருந்து கரையேற்றி விடுகிறார்கள்” என்றார்.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-84621635765600617122015-08-09T10:56:00.002+05:302015-08-09T10:56:17.057+05:30ராமகிருஷ்ணரின் குட்டிக்கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
நெட்டில் சுட்ட கதை. <br />
https://ramanans.wordpress.com/.../குருதேவர...<br />
<br />
குருதேவர் சொன்ன குட்டிக் கதை<br />
<br />
குருதேவர் ராமகிருஷ்ணர் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.<br />
“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.<br />
<br />
<br />
<br />
ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான்.<br />
<br />
ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்தான் அந்தச் சீடன். திடீரென மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர். சீடனையும் ஓடி ஒளிந்து கொள்ள சொல்லினர்.<br />
<br />
சீடன் என்ன காரணம் என்று கேட்டான்.<br />
<br />
அதற்கு மக்கள், “யானைக்கு மதம் பிடித்து விட்டது. அது ஆவேசமாக வந்து கொண்டிருக்கிறது. ஓடிப்போய் உடனே உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர்.<br />
<br />
ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறி விட்டு தன் பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.<br />
<br />
எதிரே பெரிய யானை ஒன்று வெறியோடு பிளிறிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன், சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான்.<br />
<br />
ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான்.<br />
<br />
எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது. தூர வீசி எறிந்தது.<br />
<br />
பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான்.<br />
<br />
உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று, “எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீரே, எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக் காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும் வினவினான்<br />
<br />
அதற்கு குருநாதர், “அப்பா, யானையில் நாராயணன் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு முன் பாகன் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தானே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார்.<br />
<br />
சீடன் பதில் பேச முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.<br />
<br />
”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை முடித்தார் குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்.<br />
<br />
சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-49648102090154944652015-08-04T20:36:00.002+05:302015-08-04T20:36:18.357+05:30பட்டினத்தார் பற்றிய சிறு கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ॐ விவேகானந்தன் ॐ - 13 de novembro de 2010 - denunciar abuso<br />
விவேகானந்தன் என்பவர் ஆர்குட்டில் பகிர்ந்தகதை.<br />
<br />
<br />
விமர்சிக்கும் உலகம் இது <br />
<br />
பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன் வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்து வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியது தெரியுமா?<br />
<br />
நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.<br />
<br />
<br />
அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தார். மற்றொரு பெண்மணியோ, “ஆமாம்… ஆமாம்… இவரு பெரிய சாமியாராக்கும்… தலையணை வைச்சுத் தூங்கறான் பாரு… ஆசை பிடிச்சவன்” என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், “ஆஹா… நமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையே” என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.<br />
<br />
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழே வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயா… நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரூ… இப்பவாவது ஒத்துக்கோ… இவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கே உரித்த பாணியில் “அடி போடி… இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்… அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது. <br />
<br />
நீதி: <br />
<br />
எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-50726835102402588062015-08-03T14:32:00.002+05:302015-08-03T14:33:55.922+05:30புத்தர் கதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஒருமுறை, புத்தர் தன் ஆசிரமத்தைச் சுற்றி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு சீடர் தனக்கு ஒரு புதுச் சால்வை வேண்டுமென்று அவரைக் கேட்டார்.<br />
<br />
"பழைய சால்வை என்ன ஆயிற்று?" என்று புத்தர் வினவினார்.<br />
<br />
சீடர் சொன்னார், "அது மிகவும் பழையதாகி விட்டதால் அதைப் படுக்கை விரிப்பாகப் பயன்படுத்துகிறேன்" என்று.<br />
<br />
"அப்படியானால், பழைய படுக்கை விரிப்பு என்ன ஆயிற்று?" என்று கேட்டார் புத்தர்.<br />
<br />
"அது பல இடங்களில் கிழிந்து விட்டதால், பிரித்துத் தைத்துத் தலையணை உறைகளாகப் பயன்படுத்துகிறேன்" என்றார் சீடர்.<br />
<br />
"அது சரி, முன்பாகவே தலையணை உறைகள் இருந்திருக்குமே, அவை எல்லாம் என்ன ஆயின?"<br />
<br />
"அவை மிகவும் தேய்ந்து விட்டன. ஆகவே இப்போது அவற்றை மிதியடியாகப் பயன்படுத்துகிறேன்."<br />
<br />
"ஏற்கெனவே இருந்த மிதியடி என்னவாயிற்று?" என்றார் புத்தர் விடாமல்.<br />
<br />
"அது மிகவும் தேய்ந்து, அதிலுள்ள நூல்கள் சிறு சிறு இழைகளாகவே வந்து விட்டன. அவற்றை விளக்குகளுக்குத் திரியாகப் பயன்படுத்துகிறேன் குருதேவா!" என்றார் சீடர் சலிப்படையாமல்.<br />
<br />
புத்தர் புன்னகை புரிந்தார். <br />
<br />
நீதி: <br />
<br />
இயற்கையில் இருந்து கிடைக்கும் எதையும் வீணாக்காதவனே இறைவனை அடைய முடியும்<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-55937654425569609152015-07-05T08:14:00.001+05:302015-07-05T08:14:10.856+05:30ரமணர் பொன்மொழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பகவான் ஸ்ரீ ரமணர் அருளிய சில வழிமுறைகள் ;--<br />
<br />
1.நீ உன் சுவாசத்தை ஒரு முனைப்பாக கவனித்தால் ,அது தானாகவே கும்பத்தில் {நிறுத்தல் }உன்னை கொண்டு சேர்த்து விடும் .இது பிராணாயாமம் <br />
<br />
2.நீ எவ்வளவுக்கெவ்வளவு அடங்கி பணிவாக இருக்கிறாயோ அத்தனைக்கத்தனை எல்லாவிதத்திலும் உனக்கு நல்லது <br />
<br />
3.மனதை உள்ளிழுத்துக் கொள்வதால் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சூழ்னிலையிலும் இருக்கலாம் <br />
<br />
4,உலகை கனவாக மட்டுமே கருத வேண்டும் <br />
<br />
5.மனதை நீ வெளி விஷயங்களிலும் ,எண்ணங்களாலும் திசைதிருப்ப விடக்கூடாது .<br />
வாழ்வில் உனக்கு கடமையாக அமைந்த வேலைகளை நிறைவேற்றும் வேளை தவிர மீதமான நேரமெல்லாம் ஆன்ம நிஷ்டையில் <br />
செலவிட வேண்டும் .ஒரு கணமும் கவனக் குறைவிலோ ,சோம்பலி லோ <br />
வீணாக்காதே .<br />
<br />
6.யாருக்கும் இம்மியும் தடையோ ,தொந்தரவோ விளைவிக்காதே .தவிர உன் வேலைகளை எல்லாம் நீயே செய்துகொள் .<br />
<br />
7.விருப்பும்,வெறுப்பும் இரண்டும் தவிர்க்கத்தக்கவை <br />
<br />
8.எண்ணங்கள னைத்தையும் குவித்து ஒரு முகப்படுத்தி தன்னுள் செலுத்தி தயங்காமல் :"நான் யார் ""விசாரணை செய்ய வேண்டும் <br />
<br />
ஒருமுனைப்பாக இதைச் செய்தால் சுவாசம் தானே அடங்கும் <br />
<br />
இந்த மாதிரி கட்டுப்பாடாக சாதனை செய்யும் சமயம் ,மனம் திடீரென்று கிளம்பும் .அதனால் கவனமுடன் விசாரத்தை தொடர வேண்டும் .<br />
<br />
"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் நிஷ்டை <br />
<br />
"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் ஞானம் <br />
<br />
"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் மோட்சம் <br />
<br />
<br />
<br />
"'நான் யார் ""என்று எண்ணங்களின்றி இருத்தல் சகஜம் <br />
<br />
அதனால் எண்ணங்களின் நிழல் கூட இல்லாமல் இருத்தலே பரிபூரண நிலையாகும் ---------------------------------இது நிஜம் .<br />
<br />
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------<br />
<br />
http://svdeviis.blogspot.in/2013/03/blog-post.html அவர்களுக்கு நன்றி. அதில் இருந்து இது எடுக்கப்பட்டது<br />
<br />
<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-89163983209366268052015-01-30T22:04:00.004+05:302015-01-30T22:04:30.513+05:30மாரியம்மன் 108 போற்றி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">மாரியம்மன் 108 போற்றி!<br />
ஓம் அம்மையே போற்றி<br />
ஓம் அம்பிகையே போற்றி<br />
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி<br />
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி<br />
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி<br />
ஓம் ஆதார சக்தியே போற்றி<br />
ஓம் ஆதி பராசக்தியே போற்றி<br />
ஓம் இருள் நீக்குபவளே போற்றி<br />
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி<br />
ஓம் இடரைக் களைவாய் போற்றி<br />
ஓம் இஷ்ட தேவதையே போற்றி<br />
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி<br />
ஓம் ஈடிணை இலாளே போற்றி<br />
ஓம் ஈகை மிக்கவளே போற்றி<br />
ஓம் உமையவளே தாயே போற்றி<br />
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி<br />
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி<br />
ஓம் எலுமிச்சை பிரியாயே போற்றி<br />
ஓம் எட்டுத்திக்கும் வென்றாளே போற்றி<br />
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி<br />
ஓம் ஏழையர் அன்னையே போற்றி<br />
ஓம் ஐங்கரத்தவளே போற்றி<br />
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி<br />
ஓம் ஓங்கார ரூபினியே போற்றி<br />
ஓம் ஔடதம் ஆனவளே போற்றி<br />
ஓம் கவுமாரித்தாயே போற்றி<br />
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி<br />
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி<br />
ஓம் காக்கும் அன்னையே போற்றி<br />
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி<br />
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி<br />
ஓம் குங்கும நாயகியே போற்றி<br />
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி<br />
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி<br />
ஓம் கை கொடுப்பவளே போற்றி<br />
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி<br />
ஓம் சக்தி உமையவளே போற்றி<br />
ஓம் சவுந்தர நாயகியே போற்றி<br />
ஓம் சித்தி தருபவளே போற்றி<br />
ஓம் சிம்ம வாகினியே போற்றி<br />
ஓம் சீரெலாம் தருபவளே போற்றி<br />
ஓம் சீதளா தேவியே போற்றி<br />
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி<br />
ஓம் செந்தூர நாயகியே போற்றி<br />
ஓம் செண்பகாதேவியே போற்றி<br />
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி<br />
ஓம் சொல்லின் செல்வியே போற்றி<br />
ஓம் சேனைத் தலைவியே போற்றி<br />
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி<br />
ஓம் தத்துவ நாயகியே போற்றி<br />
ஓம் தர்ம தேவதையே போற்றி<br />
ஓம் தரணி காப்பாய் போற்றி<br />
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி<br />
ஓம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி<br />
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி<br />
ஓம் தீமை களைபவளே போற்றி<br />
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி<br />
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி<br />
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி<br />
ஓம் தேசமுத்து மாரியே போற்றி<br />
ஓம் தையல் நாயகியே போற்றி<br />
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி<br />
ஓம் தோன்றாத் துணையே போற்றி<br />
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி<br />
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி<br />
ஓம் நாக வடிவானவளே போற்றி<br />
ஓம் நாத ஆதாரமே போற்றி<br />
ஓம் நாகாபரணியே போற்றி<br />
ஓம் நானிலம் காப்பாய் போற்றி<br />
ஓம் நித்ய கல்யாணியே போற்றி<br />
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி<br />
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி<br />
ஓம் நீதி நெறி காப்பவளே போற்றி<br />
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி<br />
ஓம் நேசம் காப்பவளே போற்றி<br />
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி<br />
ஓம் பவளவாய் கிளியே போற்றி<br />
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி<br />
ஓம் பசுபதி நாயகியே போற்றி<br />
ஓம் பாம்புரு ஆனாய் போற்றி<br />
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி<br />
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி<br />
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி<br />
ஓம் பிழை பொறுப்பவளே போற்றி<br />
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி<br />
ஓம் பீடை போக்குபவளே போற்றி<br />
ஓம் பீடோப ஹாரியே போற்றி<br />
ஓம் புத்தி அருள்வாய் போற்றி<br />
ஓம் புவனம் காப்பாய் போற்றி<br />
ஓம் பூமாரித்தாயே போற்றி<br />
ஓம் பூவில் உறைபவளே போற்றி<br />
ஓம் பூஜைக்குரியவளே போற்றி<br />
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி<br />
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி<br />
ஓம் மழைவளம் தருவாய் போற்றி<br />
ஓம் மங்கள நாயகியே போற்றி போற்றி<br />
ஓம் மந்திர வடிவானவளே போற்றி<br />
ஓம் மழலை அருள்வாய் போற்றி<br />
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி<br />
ஓம் மாணிக்க வல்லியே போற்றி<br />
ஓம் மகமாயித் தாயே போற்றி<br />
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி<br />
ஓம் முத்தாலம்மையே போற்றி<br />
ஓம் முத்து நாயகியே போற்றி<br />
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி<br />
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி<br />
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி<br />
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-31798248777653020012015-01-15T17:34:00.003+05:302015-01-15T17:34:38.775+05:30பிரதோஷ் நந்தி 108 போற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஓம் அன்பின் வடிவே போற்றி<br />
ஓம் அறத்தின் உருவே போற்றி<br />
ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி<br />
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி<br />
ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி<br />
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி<br />
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி<br />
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி<br />
ஓம் இடபமே போற்றி<br />
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி<br />
<br />
ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி<br />
ஓம் ஈகை உடையவனே போற்றி<br />
ஓம் உலக ரட்சகனே போற்றி<br />
ஓம் உபதேச காரணனே போற்றி<br />
ஓம் ஊக்க முடையவனே போற்றி<br />
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி<br />
ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி<br />
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி<br />
ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி<br />
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி <br />
<br />
ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி<br />
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி<br />
ஓம் கணநாயகனே போற்றி<br />
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி<br />
ஓம் கல்யாண மங்களமே போற்றி<br />
ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி<br />
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி<br />
ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி<br />
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி<br />
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி<br />
<br />
ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி<br />
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி<br />
ஓம் குணநிதியே போற்றி<br />
ஓம் குற்றம் களைவாய் போற்றி<br />
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி<br />
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி<br />
ஓம் கைலாச வாகனனே போற்றி<br />
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி<br />
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி<br />
ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி<br />
<br />
ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி<br />
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி<br />
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி<br />
ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி<br />
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி<br />
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி<br />
ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி<br />
ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி<br />
ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி<br />
ஓம் மகாதேவனே போற்றி <br />
<br />
ஓம் மகிமை பல செய்வாய் போற்றி<br />
ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி<br />
ஓம் மங்கள நாயகனே போற்றி<br />
ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி<br />
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி<br />
ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி<br />
ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி<br />
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி<br />
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி<br />
ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி<br />
<br />
ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி<br />
ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி<br />
ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி<br />
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி<br />
ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி<br />
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி<br />
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி<br />
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி<br />
ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி<br />
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி<br />
<br />
ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி<br />
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி<br />
ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி<br />
ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி<br />
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி<br />
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி<br />
ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி<br />
ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி<br />
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி<br />
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி<br />
<br />
ஓம் வித்யா காரணனே போற்றி<br />
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி<br />
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி<br />
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி<br />
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி<br />
ஓம் வேல்உடையவனே போற்றி<br />
ஓம் மகா காளனே போற்றி<br />
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி<br />
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி<br />
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி<br />
<br />
ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி<br />
ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி<br />
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி<br />
ஓம் ஊடலுக்குதவியனே போற்றி<br />
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி<br />
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி<br />
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி<br />
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி<br />
ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி<br />
ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி<br />
<br />
ஓம் மகாதேவன் கருணையே போற்றி<br />
ஓம் பரப்பிரம்மமே போற்றி<br />
ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி<br />
ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி<br />
ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி<br />
ஓம் கையிலையின் காவலனே போற்றி<br />
ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி<br />
ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-39165211355565397092015-01-03T20:35:00.003+05:302015-01-03T20:35:49.756+05:30விநாயகர் போற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஓம் விநாயகனே போற்றி<br />
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி <br />
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி <br />
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி <br />
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி <br />
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி <br />
ஓம் ஆனை முகத்தோனே போற்றி <br />
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி <br />
ஓம் ஆதி மூலமே போற்றி <br />
ஓம் ஆனந்த உருவே போற்றி <br />
ஓம் இமவான் சந்ததியே போற்றி <br />
ஓம் இடரைக் களைவோனே போற்றி <br />
ஓம் ஈசன் மகனே போற்றி <br />
ஓம் ஈகை உருவே போற்றி <br />
ஓம் உண்மை வடிவே போற்றி <br />
ஓம் உலக நாயகனே போற்றி <br />
ஓம் ஊறும் களிப்பே போற்றி <br />
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி <br />
ஓம் எளியவனே போற்றி <br />
ஓம் எந்தையே போற்றி <br />
ஓம் எங்குமிருப்பவனே போற்றி <br />
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி <br />
ஓம் ஏழை பங்காளனே போற்றி <br />
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி <br />
ஓம் ஐயனே போற்றி <br />
ஓம் ஐங்கரனே போற்றி <br />
ஓம் ஒப்பிலாதவனே போற்றி <br />
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி <br />
ஓம் ஒளிமய உருவே போற்றி <br />
ஓம் ஒளவைக் கருளியவனே <br />
போற்றி ஓம் கருணாகரனே போற்றி <br />
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி <br />
ஓம் கணேசனே போற்றி <br />
ஓம் கணநாயகனே போற்றி <br />
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி <br />
ஓம் கலியுக நாதனே போற்றி <br />
ஓம் கற்பகத்தருவே போற்றி <br />
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி <br />
ஓம் கிருபாநிதியே போற்றி <br />
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி <br />
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி <br />
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி <br />
ஓம் குணநிதியே போற்றி <br />
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி <br />
ஓம் கூவிட வருவோய் போற்றி <br />
ஓம் கூத்தன் மகனே போற்றி <br />
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி <br />
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி <br />
ஓம் கோனே போற்றி <br />
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி <br />
ஓம் சடுதியில் வருபவனே போற்றி <br />
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி <br />
ஓம் சங்கடஹரனே போற்றி <br />
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி <br />
ஓம் சிறிய கண்ணோனே போற்றி <br />
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி <br />
ஓம் சுருதிப் பொருளே போற்றி <br />
ஓம் சுந்தரவடிவே போற்றி <br />
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி <br />
ஓம் ஞான முதல்வனே போற்றி <br />
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி <br />
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி <br />
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி <br />
ஓம் துயர் துடைப்பவனே போற்றி <br />
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி <br />
ஓம் தேவாதி தேவனே போற்றி <br />
ஓம் தொந்தி விநாயகனே போற்றி <br />
ஓம் தொழுவோ நாயகனே போற்றி <br />
ஓம் தோணியே போற்றி <br />
ஓம் தோன்றலே போற்றி <br />
ஓம் நம்பியே போற்றி <br />
ஓம் நாதனே போற்றி <br />
ஓம் நீறணிந்தவனே போற்றி <br />
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி <br />
ஓம் பழத்தை வென்றவனே போற்றி <br />
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி <br />
ஓம் பரம்பொருளே போற்றி <br />
ஓம் பரிபூரணனே போற்றி <br />
ஓம் பிரணவமே போற்றி <br />
ஓம் பிரம்மசாரியே போற்றி <br />
ஓம் பிள்ளையாரே போற்றி <br />
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி <br />
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி <br />
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி <br />
ஓம் புதுமை வடிவே போற்றி <br />
ஓம் புண்ணியனே போற்றி <br />
ஓம் பெரியவனே போற்றி <br />
ஓம் பெரிய உடலோனே போற்றி <br />
ஓம் பேரருளாளனே போற்றி <br />
ஓம் பேதம் அறுப்போனே போற்றி <br />
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி <br />
ஓம் மகிமையளிப்பவனே போற்றி <br />
ஓம் மகாகணபதியே போற்றி <br />
ஓம் மகேசுவரனே போற்றி <br />
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி <br />
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி <br />
ஓம் முறக்காதோனே போற்றி <br />
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி <br />
ஓம் முக்கணன் மகனே போற்றி <br />
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி <br />
ஓம் மூத்தோனே போற்றி <br />
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி <br />
ஓம் வல்லப கணபதியே போற்றி <br />
ஓம் வரம்தரு நாயகனே போற்றி <br />
ஓம் விக்னேஸ்வரனே போற்றி <br />
ஓம் வியாஸன் சேவகனே போற்றி <br />
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி <br />
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-21516303216852619302014-12-23T09:42:00.000+05:302014-12-23T09:42:13.871+05:30சூரிய வழிபாடு தமிழில்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">சூரியன் போற்றி 108<br />
<br />
ஓம் அதிதி புத்ரனே போற்றி<br />
ஓம் அளத்தற்கரியனே போற்றி<br />
ஓம் அறுகுப்பிரியனே போற்றி<br />
ஓம் அருணன் சோதரனே போற்றி<br />
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி<br />
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி<br />
ஓம் ஆண் கிரகமே போற்றி<br />
ஓம் ஆதிவார நாதனே போற்றி<br />
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி<br />
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி<br />
<br />
ஓம் ஆன்மாவே போற்றி<br />
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி<br />
ஓம் இருள்நீக்கியே போற்றி<br />
ஓம் இயக்க சக்தியே போற்றி<br />
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி<br />
ஓம் உக்கிரனே போற்றி<br />
ஓம் உஷா நாதனே போற்றி<br />
ஓம் உவமைப் பொருளே போற்றி<br />
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி<br />
ஓம் உத்திர நாதனே போற்றி<br />
<br />
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி<br />
ஓம் என்பானவனே போற்றி<br />
ஓம் எருக்கு சமித்தனே போற்றி<br />
ஓம் எழுபரித் தேரனே போற்றி<br />
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி<br />
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி<br />
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி<br />
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி<br />
ஓம் ஓராழித்தேரனே போற்றி<br />
ஓம் ஓய்விலானே போற்றி<br />
<br />
ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி<br />
ஓம் கதிரவனே போற்றி<br />
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி<br />
ஓம் களங்கமிலானே போற்றி<br />
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி<br />
ஓம் கர்ணன் தந்தையே போற்றி<br />
ஓம் கனலே போற்றி<br />
ஓம் கண்ணில் காவலே போற்றி<br />
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி<br />
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி<br />
<br />
ஓம் காசியபர் மைந்தனே போற்றி<br />
ஓம் காயத்ரி தேவனே போற்றி<br />
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி<br />
ஓம் காலக் கணக்கே போற்றி<br />
ஓம் காய்பவனே போற்றி<br />
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி<br />
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி<br />
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி<br />
ஓம் கிரக நாயகனே போற்றி<br />
ஓம் கிருபாகரனே போற்றி<br />
<br />
ஓம் குந்திக்கருளியவனே போற்றி<br />
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி<br />
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி<br />
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி<br />
ஓம் ஞாயிறே போற்றி<br />
ஓம் ஞாலக் காவலே போற்றி<br />
ஓம் சனித் தந்தையே போற்றி<br />
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி<br />
ஓம் சாட்சித் தேவனே போற்றி<br />
ஓம் சமரிலானே போற்றி<br />
<br />
ஓம் சிங்கக் கொடியனே போற்றி<br />
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி<br />
ஓம் சிரஞ்சீவியே போற்றி<br />
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி<br />
ஓம் சுயம்பிரகாசனே போற்றி<br />
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி<br />
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி<br />
ஓம் செம்மேனியனே போற்றி<br />
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி<br />
ஓம் செந்நிறக் குடையனே போற்றி<br />
<br />
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி<br />
ஓம் சூலாயுதனே போற்றி<br />
ஓம் சோழர் மூதாதையே போற்றி<br />
ஓம் சௌரத் தலைவனே போற்றி<br />
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி<br />
ஓம் தாமிர உலோகனே போற்றி<br />
ஓம் தூயவனே போற்றி<br />
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி<br />
ஓம் நடுவிருப்போனே போற்றி<br />
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி<br />
<br />
ஓம் நலமேயளிப்பவனே போற்றி<br />
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி<br />
ஓம் நான்முனித் தந்தையே போற்றி<br />
ஓம் நாடப்படுபவனே போற்றி<br />
ஓம் நீதித் தேவனே போற்றி<br />
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி<br />
ஓம் பகற் காரணனே போற்றி<br />
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி<br />
ஓம் பரஞ்சோதியே போற்றி<br />
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி<br />
<br />
ஓம் பாலைநிலத் தேவனே போற்றி<br />
ஓம் பிரபாகரனே போற்றி<br />
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி<br />
ஓம் புத்தியளிப்பவனே போற்றி<br />
ஓம் மல நாசகனே போற்றி<br />
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி<br />
ஓம் மயில் வாகனனே போற்றி<br />
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி<br />
ஓம் முதல் கிரகமே போற்றி<br />
ஓம் முக்கோணக் கோலனே போற்றி<br />
<br />
ஓம் முழுமுதற் பொருளே போற்றி<br />
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி<br />
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி<br />
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி<br />
ஓம் விடியச் செய்பவனே போற்றி<br />
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி<br />
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி<br />
ஓம் சூரியநாராயணனே போற்றி<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-781101721379365682014-12-20T11:38:00.003+05:302014-12-20T11:38:29.315+05:30அம்மன் போற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி<br />
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி<br />
ஓம் அருமறையின் வரம்பே போற்றி<br />
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி<br />
ஓம் அரசிளங்குமரியே போற்றி<br />
ஓம் அப்பர்பிணி மருந்தே போற்றி<br />
ஓம் அமுத நாயகியே போற்றி<br />
ஓம் அருந்தவ நாயகியே போற்றி<br />
ஓம் அருள்நிறை அம்மையே போற்றி<br />
ஓம் ஆலவாய்க் கரசியே போற்றி <br />
<br />
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி<br />
ஓம் ஆதியின் பாதியே போற்றி<br />
ஓம் ஆலால சுந்தரியே போற்றி<br />
ஓம் ஆனந்தவல்லியே போற்றி<br />
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி<br />
ஓம் இமயத்தரசியே போற்றி<br />
ஓம் இடபத்தோன் துணையே போற்றி<br />
ஓம் ஈசுவரியே போற்றி<br />
ஓம் உயிர் ஓவியமே போற்றி<br />
ஓம் உலகம்மையே போற்றி <br />
<br />
ஓம் ஊழிவினை தீர்ப்பாய் போற்றி<br />
ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி<br />
ஓம் ஏகன் துணையே போற்றி<br />
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி<br />
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி<br />
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி<br />
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி<br />
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி<br />
ஓம் கல்லோர்க்கும் எளியோய் போற்றி<br />
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி <br />
<br />
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி<br />
ஓம் கனகமணிக் குன்றே போற்றி<br />
ஓம் கற்பின் அரசியே போற்றி<br />
ஓம் கருணையூற்றே போற்றி<br />
ஓம் கல்விக்கு வித்தே போற்றி<br />
ஓம் கனகாம்பிகையே போற்றி<br />
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி<br />
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி<br />
ஓம் காட்சிக்கினியோய் போற்றி<br />
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி <br />
<br />
ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி<br />
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி<br />
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி<br />
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி<br />
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி<br />
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி<br />
ஓம் சக்தி வடிவே போற்றி<br />
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி<br />
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி<br />
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி <br />
<br />
ஓம் சிவயோக நாயகியே போற்றி<br />
ஓம் சிவாநந்த வல்லியே போற்றி<br />
ஓம் சிங்கார வல்லியே போற்றி<br />
ஓம் செந்தமிழ் தாயே போற்றி<br />
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி<br />
ஓம் சேனைத் தலைவியே போற்றி<br />
ஓம் சொக்கர் நாயகியே போற்றி<br />
ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி<br />
ஓம் ஞானாம்பிகையே போற்றி<br />
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி <br />
<br />
ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி<br />
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி<br />
ஓம் திருவுடையம்மையே போற்றி<br />
ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி<br />
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி<br />
ஓம் திருமலை நாயகியே போற்றி<br />
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி<br />
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி<br />
ஓம் தென்னவன் செல்வியே போற்றி<br />
ஓம் தேன்மொழியம்மையே போற்றி <br />
<br />
ஓம் தையல்நாயகியே போற்றி<br />
ஓம் நற்கனியின் சுவையே போற்றி<br />
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி<br />
ஓம் நல்ல நாயகியே போற்றி<br />
ஓம் நீலாம்பிகையே போற்றி<br />
ஓம் நீதிக்கரசியே போற்றி<br />
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி<br />
ஓம் பழமறையின் குருந்தே போற்றி<br />
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி<br />
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி <br />
<br />
ஓம் பவளவாய்க் கிளியே போற்றி<br />
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி<br />
ஓம் பசுபதி நாயகியே போற்றி<br />
ஓம் பாகம் பிரிய அம்மையே போற்றி<br />
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி<br />
ஓம் பார்வதி அம்மையே போற்றி<br />
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி<br />
ஓம் பெரிய நாயகியே போற்றி<br />
ஓம் பொன் மயிலம்மையே போற்றி<br />
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி <br />
<br />
ஓம் மலையத்துவசன் மகளே போற்றி<br />
ஓம் மங்கல நாயகியே போற்றி<br />
ஓம் மழலைக் கிளியே போற்றி<br />
ஓம் மனோன் மணித் தாயே போற்றி<br />
ஓம் மண் சுமந்தோன் மாணிக்கமே போற்றி<br />
ஓம் மாயோன் தங்கையே போற்றி<br />
ஓம் மாணிக்க வல்லியே போற்றி<br />
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி<br />
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி<br />
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி <br />
<br />
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி <br />
ஓம் யாழ் மொழியம்மையே போற்றி<br />
ஓம் வடிவழகம்மையே போற்றி<br />
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி<br />
ஓம் வேத நாயகியே போற்றி<br />
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி<br />
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி<br />
ஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி போற்றி<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-24000876487133136532014-12-19T14:33:00.001+05:302014-12-19T14:33:02.300+05:30திருமால் போற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">திருமால் போற்றி<br />
ஓம் அப்பா போற்றி<br />
ஓம் அறமே போற்றி<br />
ஓம் அருளே போற்றி<br />
ஓம் அச்சுதா போற்றி<br />
ஓம் அரவ சயனா போற்றி<br />
ஓம் அரங்கமா நகராய் போற்றி<br />
ஓம் அற்புத லீலா போற்றி<br />
ஓம் அறுமுகனின் அம்மான் போற்றி<br />
ஓம் அனுமந்தன் தேவே போற்றி<br />
ஓம் ஆதியே அனாதி போற்றி<br />
ஓம் ஆழ்வார்கன் தொழுவாய் போற்றி<br />
ஓம் ஆதி மூலனே போற்றி<br />
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி<br />
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி<br />
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி<br />
ஓம் உமையம்மை அண்ணா போற்றி<br />
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி<br />
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி<br />
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி<br />
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி<br />
ஓம் எண்குண சீலா போற்றி<br />
ஓம் ஏழை பங்காளா போற்றி<br />
ஓம் எழில் நிறவண்ணா போற்றி<br />
ஓம் எழில்மிகு தேவே போற்றி<br />
ஓம் கலியுக வரதா போற்றி<br />
ஓம் கண்கண்ட தேவே போற்றி<br />
ஓம் கருட வாகனனே போற்றி<br />
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி<br />
ஓம் காமரு தேவே போற்றி<br />
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி<br />
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி<br />
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி<br />
ஓம் சர்வலோகேசா போற்றி<br />
ஓம் சாந்தகுண சீலா போற்றி<br />
ஓம் சீனிவாசா போற்றி<br />
ஓம் சிங்கார மூர்த்தி போற்றி<br />
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி<br />
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி<br />
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி<br />
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி<br />
ஓம் திருமகள் மணாளா போற்றி<br />
ஓம் திருமேனி உடையாய் போற்றி<br />
ஓம் திருவேங்கடவா போற்றி<br />
ஓம் தருமலைக் கொழுந்தே போற்றி<br />
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி<br />
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி<br />
ஓம் கடலமு தளித்தாய் போற்றி<br />
ஓம் நந்தகோ பாலா போற்றி<br />
ஓம் நான்முகன் பிதாவே போற்றி<br />
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி<br />
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி<br />
ஓம் நரசிம்ம தேவே போற்றி<br />
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி<br />
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி<br />
ஓம் பாவலர் பணிவாய் போற்றி<br />
ஓம் தசாவ தாரா போற்றி<br />
ஓம் தயாநிதி ராமா போற்றி<br />
ஓம் தந்தைசொல் காத்தாய் போற்றி<br />
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி<br />
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி<br />
ஓம் பரதனுக் கீந்தாய் போற்றி<br />
ஓம் பாண்டவர் துணைவா போற்றி<br />
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி<br />
ஓம் பாஞ்சாலி மானம் காத்தாய் போற்றி<br />
ஓம் பார்புகழ் தேவே போற்றி<br />
ஓம் புண்ணய மூர்த்தி போற்றி<br />
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி<br />
ஓம் வாமன வரதா போற்றி<br />
ஓம் உலகினை அளந்தாய் போற்றி<br />
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி<br />
ஓம் பரகதி அருள்வாய் போற்றி<br />
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி<br />
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி<br />
ஓம் சபரியின் கனியே போற்றி<br />
ஓம் நற்கதி தந்தாய் போற்றி<br />
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி<br />
ஓம் வைகுண்ட வாசா போற்றி<br />
ஓம் முழுமதி வதனா போற்றி<br />
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி<br />
ஓம் கமலக் கண்ணா போற்றி<br />
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி<br />
ஓம் கஸ்தூரி திலகா போற்றி<br />
ஓம் கருத்தினில் அமர்வாய் போற்றி<br />
ஓம் பவளம்போல் வாயா போற்றி<br />
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி<br />
ஓம் நான்கு புயத்தாய் போற்றி<br />
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி<br />
ஓம் சங்கு சக்கரனே போற்றி<br />
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி<br />
ஓம் கோபிகள் தலைவா போற்றி<br />
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி<br />
ஓம் வேணு கோபாலா போற்றி<br />
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி<br />
ஓம் புருடோத் தமனே போற்றி<br />
ஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றி<br />
ஓம் மாயா வினோதா போற்றி<br />
ஓம் விஜய ராகவனே போற்றி<br />
ஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றி<br />
ஓம் பதும நாபனே போற்றி<br />
ஓம் பதமலர் தருவாய் போற்றி<br />
ஓம் பார்த்த சாரதியே போற்றி<br />
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி<br />
ஓம் கரிவரத ராஜா போற்றி<br />
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி<br />
ஓம் சுந்தர ராஜா போற்றி<br />
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி<br />
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி<br />
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-8168119657913365812014-12-17T21:55:00.001+05:302014-12-17T21:55:09.824+05:30பெருமை மிகு சிவ போற்றி. சொல்லி முக்தி பெறுவோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஓம் அம்மையே அப்பா போற்றி <br />
ஓம் அளப்பிலா அருளே போற்றி <br />
ஓம் அன்பெனும் மலையே போற்றி <br />
ஓம் அடியார்கள் துணையே போற்றி <br />
ஓம் அணுவினுள் அணுவே போற்றி <br />
ஓம் அண்டங்கள் கடந்தாய் போற்றி <br />
ஓம் அகரமே அறிவே போற்றி <br />
ஓம் அறிந்திடு மொழியே போற்றி <br />
ஓம் அகத்தனே போற்றி போற்றி! <br />
ஓம் அலைகடல் விரிவே போற்றி <br />
ஓம் அழகனாம் அமுதே போற்றி <br />
ஓம் அரும்பிறை அணிந்தாய் போற்றி <br />
ஓம் அவிரொளி சடையாய் போற்றி <br />
ஓம் அகஞ்சுடர் விளக்கே போற்றி <br />
ஓம் அகந்தை நோய் அழிப்பாய் போற்றி <br />
ஓம் அருமறை முடிவே போற்றி <br />
ஓம் அருந்தவர் நினைவே போற்றி <br />
ஓம் அரஹரா போற்றி போற்றி <br />
ஓம் ஆதியே அருளே போற்றி <br />
ஓம் ஆலால கண்டா போற்றி <br />
ஓம் ஆதாரப் பொருளே போற்றி <br />
ஓம் ஆலமர் குருவே போற்றி <br />
ஓம் ஆலவாய் அப்பா போற்றி <br />
ஓம் ஆரூரின் தியாகா போற்றி <br />
ஓம் ஆடிடும் கூத்தா போற்றி <br />
ஓம் ஆடரவு அணியாய் போற்றி <br />
ஓம் ஆற்றலே போற்றி போற்றி! <br />
ஓம் இமையவர் உளத்தாய் போற்றி <br />
ஓம் இருட்கறை மிடற்றாய் போற்றி <br />
ஓம் இருவினை தவிர்ப்பாய் போற்றி <br />
ஓம் இரக்கமே வடிவாய் போற்றி <br />
ஓம் இனியசெந் தமிழே போற்றி <br />
ஓம் இலக்கியச் செல்வா போற்றி <br />
ஓம் இமயவள் பங்கா போற்றி <br />
ஓம் இன்னல்கள் களைவாய் போற்றி <br />
ஓம் இறைவனே போற்றி போற்றி! <br />
ஓம் இதயத்தே கனிவாய் போற்றி <br />
ஓம் இனிமையே நிறைப்பாய் போற்றி <br />
ஓம் இனியவர் மனத்தாய் போற்றி <br />
ஓம் இடபவா கனத்தாய் போற்றி <br />
ஓம் ஈடிலாப் பிரானே போற்றி <br />
ஓம் ஈந்தருள் தேவே போற்றி <br />
ஓம் ஈமத்தே குனிப்பாய் போற்றி <br />
ஓம் ஈசானத் திறையே போற்றி <br />
ஓம் ஈசனே போற்றி போற்றி! <br />
ஓம் உலகிதன் முதலே போற்றி <br />
ஓம் உமையொரு பாகா போற்றி <br />
ஓம் உள்ளொளிர் சுடரே போற்றி <br />
ஓம் உணவொடு நீரே போற்றி <br />
ஓம் உடுக்கையின் ஒலியே போற்றி <br />
ஓம் உடைகரித் தோலாய் போற்றி <br />
ஓம் உரைகடந் தொளிர்வாய் போற்றி <br />
ஓம் உருவொடும் அருவே போற்றி <br />
ஓம் உடையனே போற்றி போற்றி! <br />
ஓம் ஊரெல்லாம் உவப்பாய் போற்றி<br />
ஓம் ஊழினை விதிப்பாய் போற்றி <br />
ஓம் ஊங்கார ஒலியே போற்றி <br />
ஓம் ஊக்கமே உணர்வே போற்றி <br />
ஓம் எல்லையில் எழிலே போற்றி <br />
ஓம் எரிதவழ் விழியாய் போற்றி <br />
ஓம் எண்குண வடிவே போற்றி <br />
ஓம் எருதேறும் ஈசா போற்றி <br />
ஓம் எம்பிரான் போற்றி போற்றி <br />
ஓம் ஏகநா யகனே போற்றி <br />
ஓம் ஏதிலார் புகலே போற்றி <br />
ஓம் ஏத்துவார் ஏத்தே போற்றி <br />
ஓம் ஏர்முனைச் செவ்வா போற்றி <br />
ஓம் ஏந்துகூர் மழுவாய் போற்றி <br />
ஓம் ஏகம்பா இறைவா போற்றி <br />
ஓம் ஏக்கமே களைவாய் போற்றி <br />
ஓம் ஏற்றமே தருவாய் போற்றி <br />
ஓம் ஏந்தலே போற்றி போற்றி <br />
ஓம் ஐயனே அரனே போற்றி <br />
ஓம் ஐம்பூத வடிவே போற்றி <br />
ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி <br />
ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி <br />
ஓம் ஒப்பிலா மணியே போற்றி <br />
ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி <br />
ஓம் ஒள்ளிழை பாகா போற்றி <br />
ஓம் ஒண்குழைக் காதா போற்றி <br />
ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி! <br />
ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி <br />
ஓம் ஓதிடும் பொருளே போற்றி <br />
ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி <br />
ஓம் ஓமென்னும் பொருளே போற்றி <br />
ஓம் ஓசையின் ஒலியே போற்றி <br />
ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி <br />
ஓம் ஓதுசெந் தமிழே போற்றி <br />
ஓம் ஓதிடும் பண்ணே போற்றி <br />
ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி! <br />
ஓம் கறைதிகழ் கண்டா போற்றி <br />
ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி <br />
ஓம் காமனை எரித்தாய் போற்றி <br />
ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி <br />
ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி <br />
ஓம் கண்ணப்பர் முதலே போற்றி <br />
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி <br />
ஓம் கருணைமா கடலே போற்றி <br />
ஓம் கடவுளே போற்றி போற்றி! <br />
ஓம் சிவமெனும் பொருளே போற்றி <br />
ஓம் செவ்வொளி வடிவே போற்றி <br />
ஓம் தவநிலை முடிவே போற்றி <br />
ஓம் தண்பதம் தருவாய் போற்றி <br />
ஓம் பவமெலாம் தவிர்ப்பாய் போற்றி <br />
ஓம் பரமெனும் பொருளே போற்றி <br />
ஓம் புலியூரான் உளத்தாய் போற்றி <br />
ஓம் புவிபுரந் தருள்வாய் போற்றி <br />
ஓம் புண்ணியா போற்றி போற்றி!<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-34392436287326697532014-12-01T13:22:00.003+05:302014-12-01T13:22:55.666+05:30108 சிவ போற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஓம் அப்பா போற்றி <br />
ஓம் அரனே போற்றி <br />
ஓம் அரசே போற்றி <br />
ஓம் அமுதே போற்றி <br />
ஓம் அழகே போற்றி <br />
ஓம் அத்தா போற்றி <br />
ஓம் அற்புதா போற்றி <br />
ஓம் அறிவா போற்றி <br />
ஓம் அம்பலா போற்றி <br />
ஓம் அரியோய் போற்றி <br />
ஓம் அருந்தவா போற்றி <br />
ஓம் அணுவே போற்றி <br />
ஓம் அண்டா போற்றி <br />
ஓம் ஆதியே போற்றி <br />
ஓம் ஆறங்கா போற்றி <br />
ஓம் ஆரமுதே போற்றி <br />
ஓம் ஆரணா போற்றி <br />
ஓம் ஆலவாயா போற்றி <br />
ஓம் ஆரூரா போற்றி <br />
ஓம் இறைவா போற்றி <br />
ஓம் இடபா போற்றி <br />
ஓம் இன்பா போற்றி <br />
ஓம் ஈசா போற்றி <br />
ஓம் உடையாய் போற்றி <br />
ஓம் உணர்வே போற்றி <br />
ஓம் உயிரே போற்றி <br />
ஓம் ஊழியே போற்றி <br />
ஓம் எண்ணே போற்றி <br />
ஓம் எழுத்தே போற்றி <br />
ஓம் எண்குணா போற்றி <br />
ஓம் எழிலா போற்றி <br />
ஓம் எளியா போற்றி <br />
ஓம் ஏகா போற்றி <br />
ஓம் ஏழிசையே போற்றி <br />
ஓம் ஏகாந்தா போற்றி <br />
ஓம் ஐயா போற்றி <br />
ஓம் ஒருவனே போற்றி <br />
ஓம் ஒப்பிலா போற்றி <br />
ஓம் ஒளியே போற்றி <br />
ஓம் ஒலியே போற்றி <br />
ஓம் ஓங்காரா போற்றி <br />
ஓம் கடம்பா போற்றி <br />
ஓம் கதிரே போற்றி<br />
ஓம் கனியே போற்றி <br />
ஓம் கலையே போற்றி <br />
ஓம் காருண்யா போற்றி <br />
<br />
ஓம் குறியே போற்றி <br />
ஓம் குருவே போற்றி <br />
ஓம் குணமே போற்றி <br />
ஓம் கூத்தா போற்றி <br />
ஓம் கடையே போற்றி <br />
ஓம் சங்கரா போற்றி <br />
ஓம் சதுரா போற்றி <br />
ஓம் சதாசிவா போற்றி <br />
ஓம் சிவமே போற்றி <br />
ஓம் சிறமே போற்றி <br />
ஓம் சித்தமே போற்றி <br />
ஓம் சீரா போற்றி <br />
ஓம் சுடரே போற்றி <br />
ஓம் சுந்தரா போற்றி <br />
ஓம் செல்வா போற்றி <br />
ஓம் செங்கணா போற்றி <br />
ஓம் செம்பொணா போற்றி <br />
ஓம் சொல்லே போற்றி <br />
ஓம் ஞாயிறே போற்றி <br />
ஓம் ஞானமே போற்றி <br />
ஓம் தமிழே போற்றி <br />
ஓம் தத்துவா போற்றி <br />
ஓம் தலைவா போற்றி <br />
ஓம் தந்தையே போற்றி <br />
ஓம் தாயே போற்றி <br />
ஓம் தாண்டவா போற்றி <br />
ஓம் திங்களே போற்றி <br />
ஓம் திசையே போற்றி <br />
ஓம் திரிசூலா போற்றி <br />
ஓம் துணையே போற்றி <br />
ஓம் தெளிவே போற்றி <br />
ஓம் தேவ தேவா போற்றி <br />
ஓம் தோழா போற்றி <br />
ஓம் நமசிவாயா போற்றி <br />
ஓம் நண்பா போற்றி <br />
ஓம் நஞ்சுண்டா போற்றி <br />
ஓம் நன்மறையா போற்றி <br />
ஓம் நிறைவா போற்றி <br />
ஓம் நினைவே போற்றி <br />
ஓம் நீலகண்டா போற்றி <br />
ஓம் நெறியே போற்றி <br />
ஓம் பண்ணே போற்றி <br />
ஓம் பித்தா போற்றி <br />
ஓம் புனிதா போற்றி <br />
ஓம் புராணா போற்றி <br />
ஓம் பெரியோய் போற்றி <br />
ஓம் பொருளே போற்றி <br />
ஓம் பொங்கரவா போற்றி <br />
ஓம் மணியே போற்றி <br />
ஓம் மதிசூடியே போற்றி <br />
ஓம் மருந்தே போற்றி <br />
ஓம் மலையே போற்றி <br />
ஓம் மஞ்சா போற்றி <br />
ஓம் மணாளா போற்றி <br />
ஓம் மெய்யே போற்றி <br />
ஓம் முகிலே போற்றி <br />
ஓம் முத்தா போற்றி <br />
ஓம் முதல்வா போற்றி <br />
ஓம் வாழ்வே போற்றி <br />
ஓம் வைப்பே போற்றி <br />
ஓம் சிவபிரானே போற்றி ! போற்றி!<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-81269010844696356952014-11-30T15:29:00.002+05:302014-11-30T15:29:17.574+05:30விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> <br />
<br />
பாடியவர்: மாணிக்கவாசகர் தலம்: தில்லை<br />
<br />
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்<br />
உளைந்தனமுப்புரம் உந்தீ பற<br />
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற<br />
<br />
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்<br />
ஓரம்பே முப்புரம் உந்தீ பற<br />
ஒன்றும் பெருமிகை றுந்தீ பற<br />
<br />
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்<br />
அச்சு முறிந்ததென்று உந்தீ பற<br />
அழிந்தன முப்புரம் உந்தீ பற<br />
<br />
உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு<br />
எய்ய வல்லானுக்கே உந்தீ பற<br />
இளமுலை பங்கன் என்றுந்தீ பற<br />
<br />
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்<br />
ஓடியவா பாடி உந்தீ பற<br />
உருத்திர நாதனுக் குந்தீ பற<br />
<br />
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று<br />
சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற<br />
சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற<br />
<br />
புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி<br />
மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற<br />
வானவர் கோன் என்றே உந்தீ பற<br />
<br />
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை<br />
துஞ்சின வாபாடி உந்தீ பற<br />
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற<br />
<br />
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்<br />
கூட்டிய வாபாடி உந்தீ பற<br />
கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற<br />
<br />
உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே<br />
கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற<br />
கருக்கெட நாமெலாம் உந்தீ பற<br />
<br />
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்<br />
சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற<br />
தொல்லை வினைகெட உந்தீ பற<br />
<br />
நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்<br />
போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற<br />
புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற<br />
<br />
சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை<br />
வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற<br />
மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற<br />
<br />
தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்<br />
மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற<br />
மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற<br />
<br />
பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட<br />
கோலச் சடையற்கே உந்தீ பற<br />
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற<br />
<br />
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை<br />
ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற<br />
உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற<br />
<br />
தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்<br />
ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற<br />
இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற<br />
<br />
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்<br />
ஆகாசங் காவலென் றுந்தீ பெற<br />
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற<br />
<br />
திருச்சிற்றம்பலம்<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-56065991740052578972014-11-25T18:20:00.001+05:302014-11-25T18:20:41.003+05:30முருகன் 108 போற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">முருகனின் 108 போற்றி<br />
<br />
ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி<br />
ஓம் அகத்தியருக்கு அருளினோய் போற்றி<br />
ஓம் அமரரைக் காத்தாய் போற்றி <br />
ஓம் அருணகிரிக்கு அருள்வோய் போற்றி<br />
ஓம் அழகர் மலையோய் போற்றி<br />
ஓம் ஆறுமுகன் ஆனவனே போற்றி<br />
ஓம் ஆண்டிக் கோலமே போற்றி<br />
ஓம் ஆறுபடை வீடுடையாய் போற்றி<br />
ஓம் ஆறெழுத்து மந்திரம் போற்றி<br />
ஓம் இடும்பனை ஏற்றாய் போற்றி<br />
ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி<br />
ஓம் உலகை வலம் வந்தாய் போற்றி<br />
ஓம் உருகும் அடியார் உளமே போற்றி<br />
ஓம் எட்டிக்குடி அழகா போற்றி<br />
ஓம் எண் கண் இறைவா போற்றி<br />
ஓம் என்றும் இளையாய் போற்றி<br />
ஓம் ஏரகத்து அரசே போற்றி<br />
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி<br />
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி<br />
ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி<br />
ஓம் கதிர்காம அருவமே போற்றி <br />
ஓம் கந்த சுவாமியே போற்றி<br />
ஓம் கந்தகிரிக் கடம்பே போற்றி<br />
ஓம் கந்தகோட்டக் கடவூளே போற்றி<br />
ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி<br />
ஓம் கழுகுமலைக் கந்தா போற்றி<br />
ஓம் கன்னித்தமிழ் முருகா போற்றி<br />
ஓம் கார்த்திகேயன் கருணையே போற்றி<br />
ஓம் காவடிப் பிரியோய் போற்றி<br />
ஓம் கிரவூஞ்ச பேதனா போற்றி<br />
ஓம் குடைந்தைக் குமரா போற்றி<br />
ஓம் குமாரக் கடவூளே போற்றி<br />
ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி<br />
ஓம் குழந்தை வேலனே போற்றி<br />
ஓம் குன்றக் குடியாய் போற்றி<br />
ஓம் குன்றுதோறாடும் குமரனே போற்றி<br />
ஓம் கூடற் குமரா போற்றி<br />
ஓம் கொடுங்குன்றுக் கோமானே போற்றி<br />
ஓம் கொடுமள+ர்ப் ப+மானே போற்றி<br />
ஓம் கொல்லிமலை வேடனே போற்றி<br />
ஓம் கோவணப் பண்டாரமே போற்றி<br />
ஓம் கௌமாரத் தலைவா போற்றி<br />
ஓம் ஞான சக்திதரனே போற்றி<br />
ஓம் ஞான தண்டாயூதபாணியே போற்றி<br />
ஓம் சக்திவேல் பெற்றாய் போற்றி<br />
ஓம் சங்கத் தலைவா போற்றி<br />
ஓம் சடாட்சர மந்திரமே போற்றி<br />
ஓம் சரவண பவனே போற்றி<br />
ஓம் சண்முகத்து அரசே போற்றி<br />
ஓம் சதாசிவ மைந்தா போற்றி<br />
ஓம் சச்டி விரதம் போற்றி <br />
ஓம் சிங்கமுகனை வென்றாய் போற்றி<br />
ஓம் சிங்கார வேலனே போற்றி<br />
ஓம் சிகி வாகனா போற்றி<br />
ஓம் சிவகிரிச் செல்வா போற்றி <br />
ஓம் சுப்பிர மணியாய் போற்றி<br />
ஓம் சு+ரனை வென்றௌய் போற்றி<br />
ஓம் சென்னிமலைச் செல்வா போற்றி<br />
ஓம் சேவற் கொடியாய் போற்றி<br />
ஓம் சேனாதிபதிச் செவ்வேளே போற்றி<br />
ஓம் சைவக் கொழுந்தே போற்றி<br />
ஓம் தார காந்தகா போற்றி<br />
ஓம் திருச்செந்தூர் வாழவே போற்றி<br />
ஓம் திருப்பரங் குன்றௌய் போற்றி<br />
ஓம் திருப்புகழ் பெற்றௌய் போற்றி<br />
ஓம் திருப்போரூத் தேவா போற்றி<br />
ஓம் திருமாலின் மருகா போற்றி<br />
ஓம் திருத்தணி முருகா போற்றி<br />
ஓம் திருவருள் தருவாய் போற்றி<br />
ஓம் திருவிடைக்கழித் தலைவா போற்றி<br />
ஓம் திருவினும் திருவே போற்றி<br />
ஓம் தித்திக்கும் உருவே போற்றி<br />
ஓம் திவ்விய ரூபனே போற்றி<br />
ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி<br />
ஓம் தேவா சேனாபதியே போற்றி<br />
ஓம் தேவயானை கணவா போற்றி<br />
ஓம் தேவாதி தேவனே போற்றி<br />
ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி<br />
ஓம் நந்தா விளக்கே போற்றி<br />
ஓம் நவவீர நாயகனே போற்றி<br />
ஓம் பராசக்தி பாலனே போற்றி<br />
ஓம் பழநிமலை வேலனே போற்றி<br />
ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி<br />
ஓம் பன்னிரு கரத்தோய் போற்றி<br />
ஓம் பாலசுப்பிரமணியா் போற்றி <br />
ஓம் பிரம்மனைக் குட்டினோய் போற்றி<br />
ஓம் பிரம்ம சாத்தனே போற்றி<br />
ஓம் பொன்னார் திருவடியே போற்றி<br />
ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி<br />
ஓம் மயிலம் மலையரசே போற்றி<br />
ஓம் மய+ரகிரிக் கோவே போற்றி<br />
ஓம் மலையேறும் வள்ளலே போற்றி<br />
ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி<br />
ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி<br />
ஓம் முருகெனும் அழகே போற்றி<br />
ஓம் முத்தைய ரத்தினமே போற்றி<br />
ஓம் வடிவேலைப் பெற்றௌய் போற்றி<br />
ஓம் வள்ளி மணாளனே போற்றி<br />
ஓம் வள்ளிமைல வள்ளலே போற்றி<br />
ஓம் வயலூரின் வாழ்வே போற்றி<br />
ஓம் விசாகத்து ஓளியே போற்றி<br />
ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி<br />
ஓம் வீரபாகு சோதரா போற்றி<br />
ஓம் வேடனாய் வந்தாய் போற்றி<br />
ஓம் வேத மந்திரமே போற்றி<br />
ஓம் வேத மந்திரமே போற்றி<br />
ஓம் வையாபுரிக் கரசே போற்றி<br />
ஓம் யெகசோதிப் பெருமாளே போற்றி.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-19319687269478091722014-09-26T17:31:00.003+05:302014-09-26T17:31:13.471+05:30கபீர்தாசர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">கபீர்தாசர்,<br />
<br />
கபீர் என்ற ஒரு இஸ்லாமிய நெசவாளருக்கு ராமன் மேல் அளவிட முடியாத பக்தி. அதனால் திருமந்திர உபதேசம்(ராம நாம தீட்சை) பெற ராமானந்தர் என்ற குருவை அணுகினார். அந்த குருவின் சிஷ்யர்கள் அவரை அடிச்து விரட்டி விட்டனர். பிறகு பல முறை இவ்வாறே அடித்து விரட்டப்பட்டார் கபீர் தாசர்.<br />
<br />
அதனால் ராமானந்தர் கங்கைக்கு குளிக்க போகும்போது விடியற்காலையில் படிக்கட்டில் படுத்துக்கொண்டார். ராமானந்தர் தனது கால் ஒரு மனிதன் மேல் பட்டதும் ராம, ராம என்று சொல்லி காலை எடுத்துக்கொண்டார். குருவின் பாத தீட்சையும் ஆச்சு, குருவின் அருளும் ஆச்சு. மந்திர தீட்சையும் ஆச்சு என்று மகிழ்ந்த கபீர்தாசர் =அன்று முதல் ராம நாமம் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.<br />
<br />
ராமனை தன்னுள் உணர்ந்தார். <br />
அவரின் பிரபலமான பாடல் ஒன்று<br />
<br />
நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறியார்கள். <br />
<br />
அதாவது உலகம் இறைவனின் படைப்பு என்பதை யாரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர் உள்ளத்துள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறியார்கள். என்று பாடுகிறார். இது பராபக்தி எனப்படும். இந்த பாடலை முதல் இழையிலேயே சொல்லியிருக்கிறேன்<br />
<br />
பல முறை விவாதத்தில் ராமும், ரஹீமும் ஒன்று என்று சொல்ல்யிருக்கிறார். கோரக்கரை விவாதத்தில் ஜெயித்திருக்கீறார்.<br />
<br />
அவரது பாடல்களை இனிமேல் பகிர்ந்து கொள்கிறேன். <br />
<br />
அவர் மெக்கா புனதப்பயனத்தில் முக்தி அடைந்தார். வட இந்தியா முழுக்க ராம நாமத்தை பரப்பினவர் க்பீர்தாஸர்.<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-66713969847220780112014-08-26T13:26:00.003+05:302014-08-26T13:27:06.256+05:30நன்மை வளரும் பதிகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வில் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.<br />
பாட வேண்டிய பாடல்<br />
<br />
மாசில் வீணையும் மாலை மதியமும் <br />
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் <br />
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே <br />
ஈசன் எந்தை இணையடி நீழலே.<br />
<br />
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் <br />
நமச்சி வாயவே நானறி விச்சையும் <br />
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே <br />
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.<br />
<br />
ஆளா காராளா னாரை அடைந்துய்யார் <br />
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் <br />
தோளா தசுரை யோதொழும் பர்செவி <br />
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. <br />
தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்<br />
<br />
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் <br />
சுடலை சேர்வது சொற்பிர மாணமே <br />
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் <br />
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.<br />
<br />
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் <br />
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் <br />
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து <br />
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.<br />
<br />
குறிக ளுமடை யாளமுங் கோயிலும் <br />
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் <br />
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் <br />
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.<br />
<br />
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் <br />
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் <br />
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே <br />
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.<br />
<br />
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் <br />
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் <br />
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட் <br />
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.<br />
<br />
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே <br />
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் <br />
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு <br />
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.<br />
<br />
விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல் <br />
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் <br />
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான் <br />
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.<br />
<br />
<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-10471270601708218452014-08-12T16:53:00.001+05:302014-08-12T16:53:31.262+05:30தேவாரப்பாடல் . ஜோதியில் கலக்க<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">http://sivanpaattu.blogspot.in/2008/11/blog-post_11.html<br />
<br />
இந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அருமையாக எழுதியிருக்கிறார்கள்<br />
<br />
திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் . <br />
<br />
<br />
காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி <br />
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது <br />
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது <br />
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1) <br />
<br />
<br />
நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் <br />
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது <br />
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் <br />
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2) <br />
<br />
<br />
நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து <br />
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் <br />
தக்க வானவராத் தருவிப்பது <br />
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3) <br />
<br />
<br />
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் <br />
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் <br />
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி <br />
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4) <br />
<br />
<br />
கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள் <br />
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின் <br />
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் <br />
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5) <br />
<br />
<br />
மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய <br />
பந்தனை யவர் தாமும் பகர்வரேல் <br />
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் <br />
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6) <br />
<br />
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் <br />
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் <br />
விரவியே புகுவித்திடும் என்பரால் <br />
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7) <br />
<br />
<br />
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் <br />
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் <br />
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை <br />
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8) <br />
<br />
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் <br />
பாதம் தான்முடி தேடியப் பண்பராய் <br />
யாரும் காண்பதரிதாகி அலந்தவர் <br />
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9) <br />
<br />
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் <br />
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் <br />
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் <br />
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10) <br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-81229508101033318142014-08-12T16:48:00.001+05:302014-08-12T16:48:29.607+05:30திருமூலர் திருமந்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">சிவசிவ என்கிலர் தீவினையாளர்<br />
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்<br />
சிவசிவ என்னத் தேவரும் ஆவர்<br />
சிவசிவ என்னச் சிவகதி தானே<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-54973152094946699222014-08-05T19:54:00.002+05:302014-08-05T19:56:35.442+05:30திருமூலர் திருமந்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">மரத்தை மறைத்தது மாமத யானை<br />
மரத்தின் மறைந்தது மாமத யானை<br />
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்<br />
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்<br />
<br />
மரத்தால் செய்ய்பட்ட யானையைப்பார்க்கும் போது மரம் தெரிவதில்லை. யானையே தெரிகிறது. <br />
மரம் என்று பார்த்தால் யானை தெரியாது<br />
<br />
அதுபோல பஞ்சபூதங்களால் ஆன படைப்புகளை பார்க்கும்போது இறைவன் தெரிவதில்லை. ஆனால் இறைவனை பார்க்கும் போது பஞ்சபூதங்களும் தெரிவதில்லை<br />
<br />
எல்லாம் சிவமயம் என்று பார்க்கவேண்டும் என்பதே இதன் கருத்து<br />
<br />
திருமூலர் திருமந்திரம்</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-20361556897894102132014-08-04T19:45:00.002+05:302014-08-04T19:45:51.865+05:30குரு என்பவர் யார்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">யார் குரு என்பவர்?<br />
<br />
<br />
தத்துவராயர் என்பவர் தன் மாமாவான ஸ்வரூபனந்தர் என்பரோடு ஞானத்தை தேடி(குருவைத்தேடி) புறப்பட்டார்கள். <br />
<br />
இருவ்ரும் ஒரு முடிவு எடுத்தார்கள். தனித்தனியே தேடுவது என்று. அப்பொழுது ஸ்வரூபானந்தர் இருந்த இடத்திலேயே சிவ்னைதுதித்து குருவை அடைந்தார். குரு தத்துவ உபதேசம் செய்தார். அதனால் மகிழ்நத ஸ்வருப்பானந்தர், தத்துவராயரை அழைப்பதற்குள் குரு உடலை உகுத்துவிட்டார். <br />
<br />
ஸ்வரூபானந்தரே தத்துவராயருக்கு உபதேசம் செய்தார். இருவரும் தன்னை அறிந்த நினையில் ஆனந்தமாக இருந்தனர்.<br />
<br />
ஒரு பாடலின் அர்த்தம் சொன்னால் புரியும்<br />
<br />
உடுத்த முழம் துணி இருக்கிறது. பிச்சை போட பெண்கள் இருக்கிறார்கள். குளிர்ந்த ஓடை நீரைத்தருகிறது. பிச்சாபாத்திரமாக கையே இருக்கிறது. சிவனே குறை ஒன்றும் இல்லை <br />
<br />
இதுபோல நிறைய பாடியிருக்கிறார். தத்துவராயர் தன் குருவான ஸ்வரூபானந்தர் மேல் பரணி பாடினார்.(பரணி என்பது போரில் 1000 யானைகளக்கொன்றவர் மேல் பாடுவது). யாரையுமே கொல்லாத ஸ்வரூபானந்தர் மேல் பாடியதால் புலவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். <br />
<br />
அதற்கு தத்துவராயர் என் குருவின் சன்னதிக்கு வந்து சந்தேகம் கேளுங்கள் என்று சொன்னார். புலவர்களும் குருவின் சன்னதிக்கு வந்து அமர்ந்தார்கள். <br />
<br />
சத்குருவான ஸ்வரூபானந்தர் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவானது. அப்படியே நாள் போவது கூட தெரியாமல் இருந்தார்கள். ஒருவழியாக சுயநினைவு வந்து <br />
<br />
“அப்பா தத்துவராயா மனம் என்னும் மதயானையை அடக்கி காட்டிய உன் குருவின் மேல் பரணி மட்டும் அல்ல. அதற்கு மேலும் பாடலாம் என்று சொல்லி விடைபெற்றனர்.<br />
<br />
நீதி:<br />
<br />
எந்த குருவின் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவாகிறதோ அவரே நம் சத்குரு”(இதற்கு நாமும் பக்குவமாக இருககவேண்டும்)<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5397719588494284562.post-11632995773962045342014-07-31T17:35:00.000+05:302014-07-31T17:35:10.101+05:30பஜகோவிந்தத்தின் வரலாறு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இந்த கதை மிகவும் அருமையான கதை. பக்தி மார்க்கத்தில் மனதை ஈடுபடுத்தும்<br />
<br />
<br />
ஆதிசங்கரர் வட இந்தியாவில் ஒரு கிராமத்துக்கு போனார். அங்கே ஒரு வயதான மனிதன் சமஸ்கிருத இலக்கணம் படித்துக்கொண்டு இருந்தார். அதில் டுக்ருஞ்கரணே என்று மனப்பாடம் செய்து கொண்டு இருந்தார்.<br />
<br />
அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ஆதிசங்கரர். பஜகோவிந்தம் பாடினார்.<br />
<br />
அதன் முதல் பாடல் அர்த்தம்<br />
<br />
கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு மூட மனமே<br />
(கோவிந்தன் என்றால் சைவர்கள் என்ன செய்வார்கள். ஆதி சங்கரரின் குருவின் பெயர் கோவந்தர். குருவாகிய சிவனை வணங்குங்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்)<br />
சாகும் தருவாயில் டுக்ருஞ்கரணே என்ற இலக்கணப்பாடம் வந்து காப்பாற்றாது என்று பாடினார்.<br />
<br />
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் பக்தியே முக்திக்கு வழி. இலக்கண , இலக்கிய பாடங்கள் அறிவை வளர்க்க உதவி செய்யுமே தவிர பிறவிப்பெருங்கடல் தாண்ட உதவாது<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.com2