Friday, August 5, 2011

விநாயகர் சதுர்த்தியை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாட வேண்டும் இந்து திராவிட மறுமலர்ச்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, ஆக.4-

விநாயகர் சதுர்த்தியை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாட வேண்டும் இந்து திராவிட மறுமலர்ச்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

இந்து திராவிட மறுமலர்ச்சி கழக மாநகர், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி பெரியகடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட அமைப்பாளர் தளவாய் ராஜேஷ் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழாக்குழுக்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக சவுந்திரபாண்டியன், துணை தலைவராக கண்ணன், செயலாளராக குணசேகரன், நிதிக்குழு தலைவராக பழனியப்பன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

எழுச்சி விழாவாக...

விநாயகர் சதுர்த்தியை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாட ஆன்மிக சான்றோர்களை அழைப்பது, மகளிர் பங்குபெறும் திருவிளக்கு பூஜை, இளைஞர்கள் பங்கு பெறும் மாநகர் தழுவிய விநாயகர் வழிபாட்டு யாத்திரையை நடத்துவது, விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வரும் 3-ந் தேதி மாலை நடத்துவது, விநாயர் சதுர்த்தி விழாவில் சுவாமி விவேகானந்தர் கருத்துக்களை முன்னிலைப்படுத்துவது, மத்திய அரசு சட்டமாக்க முயற்சி செய்கிற மதவாத பயங்கரவாத சட்ட முன்வடிவை கண்டித்து தடுப்பதற்கு மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ராஜா, சிங்காரம், வேலு, நடராஜன், பாலகிருஷ்ணன், அமல்ராஜ் உள்பட பலர் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் சித்தார்த்தன் நன்றி கூறினார்.

நன்றி
ezhila.blogspot.com