Friday, September 26, 2014

கபீர்தாசர்

கபீர்தாசர்,

கபீர் என்ற ஒரு இஸ்லாமிய நெசவாளருக்கு ராமன் மேல் அளவிட முடியாத பக்தி. அதனால் திருமந்திர உபதேசம்(ராம நாம தீட்சை) பெற ராமானந்தர் என்ற குருவை அணுகினார். அந்த குருவின் சிஷ்யர்கள் அவரை அடிச்து விரட்டி விட்டனர். பிறகு பல முறை இவ்வாறே அடித்து விரட்டப்பட்டார் கபீர் தாசர்.

அதனால் ராமானந்தர் கங்கைக்கு குளிக்க போகும்போது விடியற்காலையில் படிக்கட்டில் படுத்துக்கொண்டார். ராமானந்தர் தனது கால் ஒரு மனிதன் மேல் பட்டதும் ராம, ராம என்று சொல்லி காலை எடுத்துக்கொண்டார். குருவின் பாத தீட்சையும் ஆச்சு, குருவின் அருளும் ஆச்சு. மந்திர தீட்சையும் ஆச்சு என்று மகிழ்ந்த கபீர்தாசர் =அன்று முதல் ராம நாமம் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.

ராமனை தன்னுள் உணர்ந்தார்.
அவரின் பிரபலமான பாடல் ஒன்று

நீர்த்துளி கடலில் அடங்கும் என்பதை யாரும் அறிவார்கள். நீர்த்துளிக்குள் கடல் அடங்கும் என்பதை யாரும் அறியார்கள்.

அதாவது உலகம் இறைவனின் படைப்பு என்பதை யாரும் அறிவார்கள். இந்த இறைவனின் படைப்பாகிய தொண்டர் உள்ளத்துள்ளே இறைவனே அடக்கம் என்பதை யாரும் அறியார்கள். என்று பாடுகிறார். இது பராபக்தி எனப்படும். இந்த பாடலை முதல் இழையிலேயே சொல்லியிருக்கிறேன்

பல முறை விவாதத்தில் ராமும், ரஹீமும் ஒன்று என்று சொல்ல்யிருக்கிறார். கோரக்கரை விவாதத்தில் ஜெயித்திருக்கீறார்.

அவரது பாடல்களை இனிமேல் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் மெக்கா புனதப்பயனத்தில் முக்தி அடைந்தார். வட இந்தியா முழுக்க ராம நாமத்தை பரப்பினவர் க்பீர்தாஸர்.