Tuesday, August 26, 2014

நன்மை வளரும் பதிகம்

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வில் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.
பாட வேண்டிய பாடல்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.

ஆளா காராளா னாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.
தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

குறிக ளுமடை யாளமுங் கோயிலும்
நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறியி லீர்மன மென்கொல் புகாததே.

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.

எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்
டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்
டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப ரவர்தமை நாணியே.

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.


Tuesday, August 12, 2014

தேவாரப்பாடல் . ஜோதியில் கலக்க

http://sivanpaattu.blogspot.in/2008/11/blog-post_11.html

இந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அருமையாக எழுதியிருக்கிறார்கள்

திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் .


காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே. (1)


நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2)


நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தருவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3)


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே. (4)


கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5)


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே. (6)

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8)

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி தேடியப் பண்பராய்
யாரும் காண்பதரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9)

கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)

திருமூலர் திருமந்திரம்

சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்னத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே

Tuesday, August 5, 2014

திருமூலர் திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்

மரத்தால் செய்ய்பட்ட யானையைப்பார்க்கும் போது மரம் தெரிவதில்லை. யானையே தெரிகிறது.
மரம் என்று பார்த்தால் யானை தெரியாது

அதுபோல பஞ்சபூதங்களால் ஆன படைப்புகளை பார்க்கும்போது இறைவன் தெரிவதில்லை. ஆனால் இறைவனை பார்க்கும் போது பஞ்சபூதங்களும் தெரிவதில்லை

எல்லாம் சிவமயம் என்று பார்க்கவேண்டும் என்பதே இதன் கருத்து

திருமூலர் திருமந்திரம்

Monday, August 4, 2014

குரு என்பவர் யார்?

யார் குரு என்பவர்?


தத்துவராயர் என்பவர் தன் மாமாவான ஸ்வரூபனந்தர் என்பரோடு ஞானத்தை தேடி(குருவைத்தேடி) புறப்பட்டார்கள்.

இருவ்ரும் ஒரு முடிவு எடுத்தார்கள். தனித்தனியே தேடுவது என்று. அப்பொழுது ஸ்வரூபானந்தர் இருந்த இடத்திலேயே சிவ்னைதுதித்து குருவை அடைந்தார். குரு தத்துவ உபதேசம் செய்தார். அதனால் மகிழ்நத ஸ்வருப்பானந்தர், தத்துவராயரை அழைப்பதற்குள் குரு உடலை உகுத்துவிட்டார்.

ஸ்வரூபானந்தரே தத்துவராயருக்கு உபதேசம் செய்தார். இருவரும் தன்னை அறிந்த நினையில் ஆனந்தமாக இருந்தனர்.

ஒரு பாடலின் அர்த்தம் சொன்னால் புரியும்

உடுத்த முழம் துணி இருக்கிறது. பிச்சை போட பெண்கள் இருக்கிறார்கள். குளிர்ந்த ஓடை நீரைத்தருகிறது. பிச்சாபாத்திரமாக கையே இருக்கிறது. சிவனே குறை ஒன்றும் இல்லை

இதுபோல நிறைய பாடியிருக்கிறார். தத்துவராயர் தன் குருவான ஸ்வரூபானந்தர் மேல் பரணி பாடினார்.(பரணி என்பது போரில் 1000 யானைகளக்கொன்றவர் மேல் பாடுவது). யாரையுமே கொல்லாத ஸ்வரூபானந்தர் மேல் பாடியதால் புலவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதற்கு தத்துவராயர் என் குருவின் சன்னதிக்கு வந்து சந்தேகம் கேளுங்கள் என்று சொன்னார். புலவர்களும் குருவின் சன்னதிக்கு வந்து அமர்ந்தார்கள்.

சத்குருவான ஸ்வரூபானந்தர் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவானது. அப்படியே நாள் போவது கூட தெரியாமல் இருந்தார்கள். ஒருவழியாக சுயநினைவு வந்து

“அப்பா தத்துவராயா மனம் என்னும் மதயானையை அடக்கி காட்டிய உன் குருவின் மேல் பரணி மட்டும் அல்ல. அதற்கு மேலும் பாடலாம் என்று சொல்லி விடைபெற்றனர்.

நீதி:

எந்த குருவின் முன்னிலையில் மனம் இறந்து மார்க்கம் தெளிவாகிறதோ அவரே நம் சத்குரு”(இதற்கு நாமும் பக்குவமாக இருககவேண்டும்)