Sunday, November 30, 2014

விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்



பாடியவர்: மாணிக்கவாசகர் தலம்: தில்லை

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தனமுப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை றுந்தீ பற

தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற
சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற

புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற

உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற
தொல்லை வினைகெட உந்தீ பற

நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்
போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற
புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற

சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற

தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற
மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற

பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற

தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற
இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீ பெற
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற

திருச்சிற்றம்பலம்

Tuesday, November 25, 2014

முருகன் 108 போற்றி

முருகனின் 108 போற்றி

ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி
ஓம் அகத்தியருக்கு அருளினோய் போற்றி
ஓம் அமரரைக் காத்தாய் போற்றி
ஓம் அருணகிரிக்கு அருள்வோய் போற்றி
ஓம் அழகர் மலையோய் போற்றி
ஓம் ஆறுமுகன் ஆனவனே போற்றி
ஓம் ஆண்டிக் கோலமே போற்றி
ஓம் ஆறுபடை வீடுடையாய் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்திரம் போற்றி
ஓம் இடும்பனை ஏற்றாய் போற்றி
ஓம் இளங்குமர ஏந்தலே போற்றி
ஓம் உலகை வலம் வந்தாய் போற்றி
ஓம் உருகும் அடியார் உளமே போற்றி
ஓம் எட்டிக்குடி அழகா போற்றி
ஓம் எண் கண் இறைவா போற்றி
ஓம் என்றும் இளையாய் போற்றி
ஓம் ஏரகத்து அரசே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஒளவைக்கு அருளினாய் போற்றி
ஓம் கதிர்காம அருவமே போற்றி
ஓம் கந்த சுவாமியே போற்றி
ஓம் கந்தகிரிக் கடம்பே போற்றி
ஓம் கந்தகோட்டக் கடவூளே போற்றி
ஓம் களிற்றூர்திப் பெருமானே போற்றி
ஓம் கழுகுமலைக் கந்தா போற்றி
ஓம் கன்னித்தமிழ் முருகா போற்றி
ஓம் கார்த்திகேயன் கருணையே போற்றி
ஓம் காவடிப் பிரியோய் போற்றி
ஓம் கிரவூஞ்ச பேதனா போற்றி
ஓம் குடைந்தைக் குமரா போற்றி
ஓம் குமாரக் கடவூளே போற்றி
ஓம் குறிஞ்சித் தலைவா போற்றி
ஓம் குழந்தை வேலனே போற்றி
ஓம் குன்றக் குடியாய் போற்றி
ஓம் குன்றுதோறாடும் குமரனே போற்றி
ஓம் கூடற் குமரா போற்றி
ஓம் கொடுங்குன்றுக் கோமானே போற்றி
ஓம் கொடுமள+ர்ப் ப+மானே போற்றி
ஓம் கொல்லிமலை வேடனே போற்றி
ஓம் கோவணப் பண்டாரமே போற்றி
ஓம் கௌமாரத் தலைவா போற்றி
ஓம் ஞான சக்திதரனே போற்றி
ஓம் ஞான தண்டாயூதபாணியே போற்றி
ஓம் சக்திவேல் பெற்றாய் போற்றி
ஓம் சங்கத் தலைவா போற்றி
ஓம் சடாட்சர மந்திரமே போற்றி
ஓம் சரவண பவனே போற்றி
ஓம் சண்முகத்து அரசே போற்றி
ஓம் சதாசிவ மைந்தா போற்றி
ஓம் சச்டி விரதம் போற்றி
ஓம் சிங்கமுகனை வென்றாய் போற்றி
ஓம் சிங்கார வேலனே போற்றி
ஓம் சிகி வாகனா போற்றி
ஓம் சிவகிரிச் செல்வா போற்றி
ஓம் சுப்பிர மணியாய் போற்றி
ஓம் சு+ரனை வென்றௌய் போற்றி
ஓம் சென்னிமலைச் செல்வா போற்றி
ஓம் சேவற் கொடியாய் போற்றி
ஓம் சேனாதிபதிச் செவ்வேளே போற்றி
ஓம் சைவக் கொழுந்தே போற்றி
ஓம் தார காந்தகா போற்றி
ஓம் திருச்செந்தூர் வாழவே போற்றி
ஓம் திருப்பரங் குன்றௌய் போற்றி
ஓம் திருப்புகழ் பெற்றௌய் போற்றி
ஓம் திருப்போரூத் தேவா போற்றி
ஓம் திருமாலின் மருகா போற்றி
ஓம் திருத்தணி முருகா போற்றி
ஓம் திருவருள் தருவாய் போற்றி
ஓம் திருவிடைக்கழித் தலைவா போற்றி
ஓம் திருவினும் திருவே போற்றி
ஓம் தித்திக்கும் உருவே போற்றி
ஓம் திவ்விய ரூபனே போற்றி
ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி
ஓம் தேவா சேனாபதியே போற்றி
ஓம் தேவயானை கணவா போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் நக்கீரனைக் காத்தாய் போற்றி
ஓம் நந்தா விளக்கே போற்றி
ஓம் நவவீர நாயகனே போற்றி
ஓம் பராசக்தி பாலனே போற்றி
ஓம் பழநிமலை வேலனே போற்றி
ஓம் பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் பன்னிரு கரத்தோய் போற்றி
ஓம் பாலசுப்பிரமணியா் போற்றி
ஓம் பிரம்மனைக் குட்டினோய் போற்றி
ஓம் பிரம்ம சாத்தனே போற்றி
ஓம் பொன்னார் திருவடியே போற்றி
ஓம் மயிலேறும் மாணிக்கமே போற்றி
ஓம் மயிலம் மலையரசே போற்றி
ஓம் மய+ரகிரிக் கோவே போற்றி
ஓம் மலையேறும் வள்ளலே போற்றி
ஓம் மலையைப் பிளந்தோய் போற்றி
ஓம் மனதைக் கவர்ந்தோய் போற்றி
ஓம் முருகெனும் அழகே போற்றி
ஓம் முத்தைய ரத்தினமே போற்றி
ஓம் வடிவேலைப் பெற்றௌய் போற்றி
ஓம் வள்ளி மணாளனே போற்றி
ஓம் வள்ளிமைல வள்ளலே போற்றி
ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
ஓம் விசாகத்து ஓளியே போற்றி
ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
ஓம் வீரபாகு சோதரா போற்றி
ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் வேத மந்திரமே போற்றி
ஓம் வேத மந்திரமே போற்றி
ஓம் வையாபுரிக் கரசே போற்றி
ஓம் யெகசோதிப் பெருமாளே போற்றி.