Wednesday, March 28, 2012

கோளறு பதிகம்

திருஞான சம்பந்தர் சமணர்களோட வாதம் செய்ய மதுரைக்கு புறப்பட்டார். அப்பொழுது அப்பர் (திருநாவுக்கரசர்) நாளும் கோளும் நல்லதாக இல்லை. அது மட்டுமில்லாமல் சமணர்கள் சூழ்ச்சிக்காரர்கள் என்று சொனனர். ஆனால் திருஞான சம்பந்தர் கோளர்று பதிகம் பாடி சென்றார். வாதத்தில வென்றார். அந்தக்கதை பிறகு

1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

6. வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடையேறு செல்வன் அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்
பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருவகாலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

2 comments:

Madhavan Srinivasagopalan said...

கர்நாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயர் இந்தப் பாடலை பாடிக் கேட்டு இருக்கேன்...(ஒலிப் பதிவில்) முதல் பாடலுக்கு அர்த்தம் புரிந்தது. முடிந்தால் இதான் அர்த்தத்தையும் சொல்லவும்.
பகிர்விற்கு நன்றி

Unknown said...

சமணர்களோட திருஞான சம்பந்தர் வாதத்துக்கு போகும்போது இந்த பதிகம் பாடிவிட்டு சென்றார். (அப்பொழுது நாளும் கோளூம் சரியில்லை . அதனால்)அனல் வாதம் , புனல் வாதம் இரண்டிலும் வென்றார்.

எனக்கு தெரிஞ்சது அவ்ளவவே. அதனால் அர்த்தம் படித்துவிட்டு பின்னால் போடுகிறேன்