Tuesday, August 5, 2014

திருமூலர் திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்

மரத்தால் செய்ய்பட்ட யானையைப்பார்க்கும் போது மரம் தெரிவதில்லை. யானையே தெரிகிறது.
மரம் என்று பார்த்தால் யானை தெரியாது

அதுபோல பஞ்சபூதங்களால் ஆன படைப்புகளை பார்க்கும்போது இறைவன் தெரிவதில்லை. ஆனால் இறைவனை பார்க்கும் போது பஞ்சபூதங்களும் தெரிவதில்லை

எல்லாம் சிவமயம் என்று பார்க்கவேண்டும் என்பதே இதன் கருத்து

திருமூலர் திருமந்திரம்

2 comments:

தனிமரம் said...

மரம் கடந்து மந்திரம் ஜோசிப்போம் பகிர்வு அருமை சகோ!

தனிமரம் said...

மரம் கடந்து மந்திரம் ஜோசிப்போம் பகிர்வு அருமை சகோ!