Thursday, July 31, 2014

பஜகோவிந்தத்தின் வரலாறு

இந்த கதை மிகவும் அருமையான கதை. பக்தி மார்க்கத்தில் மனதை ஈடுபடுத்தும்


ஆதிசங்கரர் வட இந்தியாவில் ஒரு கிராமத்துக்கு போனார். அங்கே ஒரு வயதான மனிதன் சமஸ்கிருத இலக்கணம் படித்துக்கொண்டு இருந்தார். அதில் டுக்ருஞ்கரணே என்று மனப்பாடம் செய்து கொண்டு இருந்தார்.

அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ஆதிசங்கரர். பஜகோவிந்தம் பாடினார்.

அதன் முதல் பாடல் அர்த்தம்

கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு,கோவிந்தனைப்பாடு மூட மனமே
(கோவிந்தன் என்றால் சைவர்கள் என்ன செய்வார்கள். ஆதி சங்கரரின் குருவின் பெயர் கோவந்தர். குருவாகிய சிவனை வணங்குங்கள் என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்)
சாகும் தருவாயில் டுக்ருஞ்கரணே என்ற இலக்கணப்பாடம் வந்து காப்பாற்றாது என்று பாடினார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் பக்தியே முக்திக்கு வழி. இலக்கண , இலக்கிய பாடங்கள் அறிவை வளர்க்க உதவி செய்யுமே தவிர பிறவிப்பெருங்கடல் தாண்ட உதவாது

2 comments:

Madhavan Srinivasagopalan said...

Useful information. Thanks for sharing.

நாமக்கல் சிபி said...

/பக்தியே முக்திக்கு வழி/

அருமை! தொடர்ந்து பகிருங்கள்!