Sunday, July 27, 2014

அத்வைதம்

சுருக்கமான கதை(எனக்கு சரியாக எழுத தெரியாத காரணத்தினால் எழுத்துப்பிழை, வாக்கியப்பிழையை பொறுக்கவேண்டும்)

நாம தேவர் என்ற மகான் வட இந்தியாவில் புகழ் பெற்றவர். அவர் சிறுவயதிலேயே விட்டோபா என்ற திருமாலின் கருணையைப்பெற்றவர். அதனால் பக்தியில் திளைத்தவர்.

அவர் ஒரு சத்சஙக்த்திற்கு போனார். அதில் கோராகும்பர் என்ற மகானும் இருந்தார். அவர் குயவர் இனத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒரு எண்ணம் வந்தது . குயவர் சட்டி தட்டும் கட்டையால் எல்லோர் தலையிலும் தட்டிப்பார்த்து சுட்ட சட்டி எது? சுடாத சட்டி எது? என்று பார்த்தார்.

அப்பொழுது நாம தேவர் தலையில் தட்டும்போது நாம தேவர் பொங்கி எழுந்தார். என் தலையில் தட்டி என்னை பரிசோதிக்க நீ யார் என்று இரைந்து பேசினார்.

இதைப்பார்த்த கோராகும்பர் இதோ ஒரு சுடாத மண்சட்டி என்று கிண்டல் செய்தார்.

அதனால் கோபப்பட்ட நாமதேவர் நேராக விட்டலனிடம்(விஷ்ணு) போனார். என்னைப்பார்த்து ஒரு குயவன் சுடாத பச்சை மண்சட்டி என்று சொல்லிவிட்டானே என்று கத்தினார். விட்டலனோ நீ உண்மையிலெயே சுடாத மண்சட்டிதான். அத்வைதம் என்ற தத்துவத்தை உணரவில்லை என்று பதில் சொன்னார்.

அந்த தத்துவத்தை நீயே விளக்கியருள் என்றூ நாமதேவர் கேட்டார். அதற்கு விட்டலனோ அதை விளக்க சத்குருவால் மட்டுமே முடியும் என்றூ சொல்லி அனுப்பினார். சத்குருவை நாமதேவர் தேடினார். விட்டலன் சத்குரு சிவன் கோயிலில் இருப்பதாக சொல்லி அனுப்பினார்.

அந்த சத்குருவை பார்க்க நாமதேவர் போனார். அவரோ வயோதிகர். வயதான காரணத்தினால் சிவலிங்கத்தின் மேல் கால் போட்டு படுத்திருந்தார்.

நாமதேவரால் இந்த அபசாரத்தை பொறுக்க முடியவில்லை. சத்குருவின் அபசாரத்தை நீக்கக்கருதி விளக்கமாக சொன்னார். அதற்கு சத்குருவான சிவனே பதில் சொன்னார். எங்கே சிவலிங்கம் இல்லையோ அங்கே என் காலை வை என்றார்.

நாமதேவர் காலை வேறோரிடம் எடுத்து வைத்தார். அங்கே புது சிவலிங்கம் உருவாகி காலைத்தாங்கி நின்றது. எங்கே காலை மாற்றி வைத்தாலும் சிவலிங்கம் உருவாகியது. நாமதேவர் குருவின் காலை எடுத்து தன் தலை மேல் வைத்தார். அதனால் நாமதேவரே சிவலிங்கமானார். குருவின் காலடி தீட்சையினால் மனம் பக்குவமானது.

நான் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்கும் நிறைந்திருப்பவன் திருமால் என்ன்னும் விஷ்ணுவே என்ற உண்மையை உணர்ந்தார். சட்டி, சுட்ட சட்டி ஆனது.

அது முதல் நாமதேவர் கோவிலுக்கு போவதில்லை. ஒரு நாள் விஷ்ணுவே நேரில் தோன்றி “ஏதப்ப்பா என்னை அறவே மறந்துவிட்டாயே என்று கேட்டார். அதற்கு நாமதேவர் “பகவானே மறக்க நீயும் நானும் வேற. நீயும் நானும் ஒரே பொருள் இல்லையா?” என்று பதிலுக்கு கேட்டார். அப்பா சட்டி சுட்டசட்டி ஆகிவிட்டது என்று கூறி விஷ்ணு மறைந்தார்.

இந்தக்கதை வட இந்தியாவில் அத்வைத தத்துவத்தை உணர வைக்க ஆன்மீகவாதிகளால் சொல்லப்படுவது

நாமஜெபமே இறைவனை உணர்விக்கவல்லது(கலிகாலத்தில் மட்டும்). அதனால் நாம ஜெபம் செய்வோம். நான் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் மட்டுமெ என்ற உண்மையை உணர்வோம்.

2 comments:

Ravichandran M said...

பக்குவம் அடைந்த மனது வேண்டும் ஒவ்வொருவருக்கும் ... இந்த நிலை வந்துவிட்டால் சுட்ட சட்டிதான்! அதுவரை சுடாத மண் சட்டிதான்!

நாமக்கல் சிபி said...

அருமை! தொடர்ந்து பகிருங்கள்!